
கேஜிஎஃப் 2 சாதனை
ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்த கேஜிஎஃப் 2 திரைப்படம், இதுவரை 300 கோடி ருபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழகத்திலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேரளா, ஆந்திரா, வட இந்தியாவிலும் வசூலில் பல்வேறு சாதனைகளை கேஜிஎஃப் 2 படைத்து வருகிறது.

புதிய முடிவு
இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் வெளியே செல்ல முடியாது என்பதால், கிரிக்கெட் வீரர்கள் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் திரைப்படத்தை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆர்சிபி நிர்வாகம் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

வீரர்கள் மகிழ்ச்சி
அதன்படி, கேஜிஎஃப் 2 திரைப்படத்தை ஹோட்டல் லாபியில் திறந்தவெளியில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி, அதிநவீன ஒலி, ஒளி வசதியுடன் கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தை ஆர்சிபி வீரர்களுக்கு திரையிட்டனர். இந்தப் படத்தை விராட் கோலி, தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் பார்த்து ரசித்தனர்.

ஹோட்டலுக்கு வந்த தியேட்டர்
2 மாதங்களுக்கு மேல் பயோ பபுளில் வீரர்கள் இருப்பதால் மனது தொய்வு அடையும் என்பதால், தியேட்டரையே , ஹோட்டலுக்கு கொண்டு வந்து ஆர்சிபி அணி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. ஆர்சிபி அணியை போல் இனி மற்ற அணிகளும் கேஜிஃஎப் 2 படத்தை வீரர்களுக்கு காட்ட முடிவு எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications