
அதிரடி தொடக்கம்
கேகேஆர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் முதல் ஓவரை வீசினார். 1 ரன்னில் மாயங் அகர்வால் இருந்த போது எல்பிடபிள்யூ ஆனார். அதன் பிறகு களமிறங்கிய ராஜபக்சே அதிரடியை காட்டினார். சிக்சர், பவுண்டரி என அடித்து கொல்கத்தா வீரர்களுக்கு நெருக்கடி அளித்தார். 9 பந்தை எதிர்கொண்ட அவர் 31 ரன்கள் அடித்தார். இதில் 3 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.

நடுவரிசை வீரர்கள்
இருப்பினும் ராஜபக்சே 31 ரன்னில் சிவம் மவி பந்தில் ஆட்டமிழக்க, பொறமையாக விளையாடிய ணிகர் தவானும் நடையை காட்டினார். இதனால் பவர்பிளேயில் பஞ்சாப் அணி 62 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. அடுத்தடுத்து விக்கெட் பறிப்போனாலும், பஞ்சாப் அணியின் நடுவரிசை வீரர்கள் கொஞ்சம் பெரிய ஷாட்களை ஆடாமல் ரன் சேர்த்து இருக்கலாம்.

ஸ்ரேயாஸ் கேப்டன்ஷி
ஆனால் அவர்கள் பீஸ்ட் மோடில் இருந்தனர். இதனால் பெரிய ஷாட்களை அடிக்கும் முனைப்பில் வீரர்கள் இருக்கும் போது பார்ட் டைம் வீரர்களை பந்துவீச அழைத்தால் சரி வராது என்பதை உணர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், முன்னணி பந்துவீச்சாளர்களை வைத்தே ஓவர்களை நகர்த்தினார். ஸ்ரேயாஸ் விரித்த வலையில் விசமாக சிக்கியது பஞ்சாப் அணி. அனுபவ வீரர்களின் ஓவர்களை அமைதியாக விளையாடி விட்டு, பின்னர் புதுமுகம் வீரர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி இருக்கலாம்.

137 ரன்களுக்கு சுருண்டது
ஆனால் பஞ்சாப் அணி வீரர்களோ, நரைன், வருண் சக்ரவர்த்தி, உமேஷ் யாதவ் ஓவர்களை அடித்து ஆடவே முற்பட்டனர். இதனால் லிவிங்ஸ்டோன், ராஜ் பவா, ஷாரூக்கான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 102 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்தது. இறுதியில் ரபாடா மட்டும் 25 ரன்கள் எடுக்க, பஞ்சாப் அணி 10 பந்துகள் எஞசிய நிலையில் 137 ரன்களுக்கு சுருண்டது. கொல்கத்தா அணியின் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இதன் மூலம் பர்பிள் கேப்பை உமேஷ் யாதவ் பெற்றார்.


Click it and Unblock the Notifications











