
அடிக்கடி மாற்றம்
நடப்பு சீசனில் மட்டும் கேகேஆர் அணி 20 வீரர்களை பிளேயிங் லெவனில் விளையாட வைத்துள்ளது. கேகேஆர் அணி வீரர்களை அடிக்கடி மாற்றி, பேட்டிங் வரிசையில் நிலையற்ற தன்மையை கொண்டு வந்துவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கெயிப் குற்றச்சாஞ்சாட்டினார். மேலும், பயிற்சியாளர் மெக்குல்லம் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இடையே விரிசல் ஏற்பட்டதும் தெளிவாக தெரிகிறது.

அணியில் விரிசல்
கடந்த சில போட்டிக்கு முன் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டது குறித்து மெக்குல்லமிடம் வெளிப்படையாக ஸ்ரேயாஸ் ஐயர் களத்தில் கேள்வி கேட்டது கேமிராவில் பதிவானது. நன்றாக சென்ற அணி எப்படி தோற்றது என பலரும் யோசித்த நிலையில், அதற்கான காரணத்தை வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டார் ஸ்ரேயாஸ்.

சிஇஓ தலையீடு
மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு பேசிய ஸ்ரேயாஸ், கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவனில் தேர்வு செய்வதில் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் தலையிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அணி வீரர்களிடம் இன்றைய போட்டியில் நீங்கள் இல்லை என்று சொல்வதற்கே கடினமாக உள்ளதாக ஸ்ரேயாஸ் குறிப்பிட்டார்.

கடும் அதிருப்தி
இதன் மூலம் பிளேயிங் லெவன் தேர்வு செய்வதில் தமக்கு முழு சுதந்திரம் இல்லை என்று தெளிவாக ஸ்ரேயாஸ் ஐயர் கூறிவிட்டார். ஒரு அணியில் யார் விளையாட வேண்டும், விளையாட கூடாது என முடிவு எடுப்பதில் முழு அதிகாரம் கேப்டனிடம் மட்டுமே உள்ளது. ஆனால் பயிற்சியாளர்கள், அணி நிர்வாகிகள் தலையிட்டால், அது அணிக்கு தான் சரிவை தரும். இதனால் கேகேஆர் அணி மீது ஸ்ரேயாஸ் கடும் அதிருப்தியில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











