
மனநிலை
கொல்கத்தா அணியை வெளியில் இருந்து பார்க்கும் போது நான் இதை தான் கவனித்தேன். முதல் பந்தில் இருந்து எதிரணிக்கு பஞ்ச் தருவார்கள். எதிரணியை ஸ்தம்பிக்க வைப்பதில் வல்லவர்கள். இதே போன்ற மனநிலை கொண்ட அணியை தான் நான் விரும்புகிறேன். அதே மனநிலையுடன் கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்கள் இம்முறையும் இருக்க வேண்டும்.

சீனியர்கள்
ஆரோன் பிஞ்ச், பாட் கம்மின்ஸ், ரஸில், ரஹானே போன்ற சீனியர் வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை பெருமையாக நினைக்கிறேன். அவர்கள் நாட்டுக்கு அவர்கள் பல சாதனைகளை செய்துள்ளனர். ஒரு கேப்டனாக அவர்களிடம் பல அறிவுரைகளை கேட்பேன். இளம் வீரர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று அவர்களிடம் கற்று கொள்வேன்.

எனது ரோல்
இன்னும் பேட்டிங் வரிசை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நான் மூன்றாவது வீரராக களமிறங்கலாம் என்று நினைக்கிறேன். நான் சூழலுக்கு எற்ப விளையாடுவேன். நான் நங்கூரம் போல் நின்று ஆடுவேன். அதற்காக என்னை அதே பணியை செய்ய சொல்வது சரியதாக இருக்காது. எனக்கு அதிரடி ஆடவும் தெரியும். சூழலுக்கு ஏற்ப நம் ஆட்டத்தை கட்டமைக்க வேண்டும்.

தொடக்க ஆட்டம்
வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணிக்காக நன்றாக விளையாடியுள்ளார். அவர் ஓபனிங் இறங்குவாரா என்று முடிவு செய்யவில்லை. என்னை பொறுத்தவரை அணிக்கு எது தேவையோ, அதனை செய்யக் கூடிய வீரர் தான் வெங்கடேஷ் ஐயர். வான்கடே மைதானத்தில் பந்து பேட்டிற்கு நன்றாக வரும். தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு முதல் போட்டிக்கு தயாராகி வருகிறோம்.


Click it and Unblock the Notifications











