
சிஎஸ்கேவின் தோல்வி
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப, தோனி மட்டுமே அரைசதம் அடித்து காப்பாற்றினார். இதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இந்த வெற்றி கொல்கத்தாவுக்கு புதிய பயணத்தை தொடங்கி வைத்துள்ளது.

அடுத்த கம்பீர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கௌதம் கம்பீர் சென்ற பிறகு வியூகம் அமைப்பது, பேட்டிங் ஆர்டரை சரி செய்வது பெரும் பிரச்சினையாகவே இருந்து வந்தது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த குறையை தீர்த்து வைத்துள்ளார். பவுலர்களை தேர்வு செய்தது, எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதற்கான வியூகம் என தோனிக்கே டஃப் கொடுத்தார். இதுமட்டுமல்லாமல் கொல்கத்தா அணியின் 10 ஆண்டு கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தார்.

10 ஆண்டு காத்திருப்பு
மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா அணி கடந்த 10 ஆண்டுகளாக ஒரு வெற்றி கூட பெறாமல் இருந்து வந்தது. 11 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி தான். ஐபிஎல் வரலாற்றில் அங்கு சாதிக்க வேண்டும் என்பது அந்த அணிக்கு ஏக்கமாகவே இருந்தது. இந்நிலையில் அதனை தனது முதல் போட்டியிலேயே சரி செய்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். அதுவும் சென்னை போன்ற பலமான அணியை வென்று பெற்றுக்கொடுத்துள்ளார்.

பழித் தீர்க்கிறாரா ஸ்ரேயாஸ்
ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் கூட செல்ல முடியாமல் இருந்த டெல்லி அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் அவரை டெல்லி அணி கழட்டிவிட்டது. அவர்களை பழிவாங்குவதற்காகவே இந்த சீசனில் ஸ்ரேயாஸ் அடுத்தடுத்து வெற்றியை பெற்றுக்கொடுக்க காத்துள்ளார்.


Click it and Unblock the Notifications