
தப்பித்த பஞ்சாப்
பஞ்சாப் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் இருக்கும் போதே, அந்த அணி 200 ரன்கள் மேல் அடித்தாலும் தொடர்ந்து தோற்கும். அதற்கு காரணம் ராகுலின் கேப்டன்சி தான் என்ற குற்றச்சாட்டு இருந்தது. தற்போது பஞ்சாப் அணிக்கு மாயங் அகர்வால் கேப்டனாக ஆனதும் அந்த அணி வெற்றி பெற்றது.

கோட்டைவிட்டார்
தற்போது ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக பொறுப்பேற்று முதல் போட்டியிலேயே அந்த அணி தோல்வியை தழுவியது. எப்போதும் பேட்டிங்கில் ரன் குவிக்கும் ராகுல், இம்முறை டக் அவுட்டாகி வெளியேறினார். குஜராத் அணியின் விக்கெட்டுகளை தொடக்கத்தில் வீழ்த்தினாலும், அந்த தொடக்கத்தை பயன்படுத்த தெரியாமல் கோட்டை விட்டார் ராகுல்.

மோசமான முடிவு
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், நேற்று ராகுலில் மோசமான கேப்டன்சிக்கு ஒரே ஒரு சம்பவத்தை பார்த்தாலே போதும். நேற்று சமீரா, ஆவேஷ் கான் ஆகியோருக்கு ஓவர்கள் இருந்த போதிலும், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் பார்ட் டைம் வீரர் தீபக் ஹூடாவை 3வது ஓவர் வீச அழைத்தார் ராகுல். ஆனால் குஜராத் அணி வீரர்கள் அந்த ஓவரில் ரொம்ப தேங்ஸ் ராகுல் என்று மனதில் கூறிவிட்டு, 22 ரன்களை விளாச ஆட்டமே மாறியது.

ஒரு வெற்றி கூட இல்லை
இது எல்லாம் கூட பரவாயில்லை தோல்விக்கு பிறகு பேசிய ராகுல், நாங்கள் சிறப்பாக விளையாடினோம். இந்த தோல்வி கூட எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி தான் என்று பஞ்ச் அடித்தார். கேப்டன் பொறுப்பு என்பது எல்லோருக்குமானது அல்ல, அது வரவில்லை என்றால் ஒதுங்கி கொண்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு தருவது தான் நமக்கும், நமது அணிக்கும் நாம் செய்யும் நல்ல விசயமாகும். நடப்பாண்டில் ராகுல் கேப்டனாக ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











