ஐபிஎல் - முதல் பந்திலேயே நாடகம்.. ஏமாற்ற நினைத்த ராகுல்.. தட்டி தூக்கிய ஹர்திக்
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் 4வது லீக் ஆட்டத்தில் புத்தம் புதிய அணிகளான குஜராத்தும், லக்னோவும் மோதியது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
போட்டி தொடங்கியதும் சிறிது நேரம் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு கொஞ்சம் சாதகமாக இருக்கும்.

முகமது ஷமி
பிறகு பனிப்பொழிவு இருக்கும் என்பதால், 2வது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும். 205 ரன்கள் அடித்தும் ஆர்சிபி தோல்வி அடைந்ததால், பெரிய இலக்கை குவிக்கும் முனைப்புடன் லக்னோ அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் களமிறங்கினார். ஆனால், முகமது ஷமி முதல் பந்தையே துல்லியமாக வீசி, லக்னோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

டிஆர்எஸ்
4வது ஸ்டம்ப் லைனுக்கு வந்த பந்தை ராகுல் தொட அது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால் ஒன்றுமே நடக்காதது போல் கேஎல் ராகுல் நின்றார். நடுவரும் இதற்கு அவுட் தரவில்லை. இதனால் இது அவுட்டா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து விக்கெட் கீப்பர் மேத்தீவ் வெட், டிஆர்எஸ் கேட்க கோரினார்.

அவுட்
இதனால் குயின்டன் டி காக் மீது அத்தனை பொறுப்பும் வந்து விழுந்தது. ஆனால் அவரும் ஷமி வீசிய 3வது ஓவரில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழக்க, லக்னோ அணி 13 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. முகமது ஷமி சமீப காலமாக டெஸ்ட் போட்டியில் மட்டுமே சேர்க்கப்படுகிறார். எனக்கு அனைத்து விதமான கிரிக்கெட்டும் விளையாட தெரியும் என்று முகமது ஷமி காண்பித்துள்ளார்.

குயின்டன் டி காக்
இதனால் குயின்டன் டி காக் மீது அத்தனை பொறுப்பும் வந்து விழுந்தது. ஆனால் அவரும் ஷமி வீசிய 3வது ஓவரில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழக்க, லக்னோ அணி 13 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியமு. முகமது ஷமி சமீப காலமாக டெஸ்ட் போட்டியில் மட்டுமே சேர்க்கப்படுகிறார். எனக்கு அனைத்து விதமான கிரிக்கெட்டும் விளையாட தெரியும் என்று முகமது ஷமி காண்பித்துள்ளார்.


Click it and Unblock the Notifications