
அதிர்ச்சி தகவல்
ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அணி நிர்வாகத்திற்கு அதிர்ச்சி செய்தி கிடைத்தது. அதாவது புனே நகரத்தில் இருந்து தான் லக்னோ அணி மும்பைக்கு வந்திருந்தது. வீரர்கள் வந்த போதும் நிர்வாகிகள் கடைசி நேரத்தில் தான் வருகை தந்தனர். வரும் வழியில் அவர்கள் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர்.

3 அதிகாரிகள்
லக்னோ அணியின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஐயர், அவரின் உதவியாளர் ரச்சித்தா பெர்ரி ஆகியோர் இருந்தனர். இவர்களுடன் சேர்ந்து கவுதம் கம்பீரின் மேனேஜர் கௌரவ் அரோராவும் உடன் இருந்துள்ளார். அவர்கள் மூவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தப்பினாரா கம்பீர்
அணி ஆலோசகர் கம்பீரும் இந்த காரில் தான் வந்திருக்க வேண்டியது என தெரிகிறது. வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்த முறை அணி பேருந்திலேயே வந்துவிட்டதால், அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தப்பியதாக தெரிகிறது.

நிர்வாகத்தின் விளக்கம்
இதுகுறித்து லக்னோ அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், 3 அதிகாரிகள் கார் விபத்தில் சிக்கியதாகவும், அவர்களுக்கு பெரிய அளவில் காயம் இல்லை என்பதால் விரைவில் குணமடைவார்கள் எனத்தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, அணி வீரர்கள் இந்த செய்தி அறிந்து பதற்றமடையாமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications