
ஆர்சிபி இன்னிங்ஸ்
இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் ஓப்பனிங் வீரர் டூப்ளசிஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி 58 ரன்கள் அடித்து கம்பேக் தந்தார். இவருக்கு உறுதுணையாக நின்ற ராஜத் பட்டிதார் 52 ரன்களை விளாச, 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை குவித்தது.

தாமதம் ஏன்
இந்த போட்டியிலும் வழக்கம் போல நடுவர்கள் சம்பந்தபட்ட சர்ச்சை எழுந்தது. அதாவது ஆட்டத்தின் முதல் பந்தை முகமது ஷமி வீச, அது டிஃபண்ட் செய்யப்பட்டது. எனினும், ஷமி ஏதோ தவறாக இருப்பதை போன்றே உணர்ந்தார். சில விநாடிகள், பந்துவீசவே யோசித்தார். பிறகு அவசர அவசரமாக டக் அவுட்டில் இருந்து ஒரு வீரரை அழைத்தார்.

என்ன செய்தார்
களத்திற்குள் வந்த அந்த வீரர், தனது கையில் ஒரு டேப்பையும் எடுத்து வந்து திடீரென பந்துவீசும் தூரத்தை அளந்தார். ஷமிக்கு பவுலிங் தூரம் குறைவாக இருப்பது போன்றும், நோ பால் வீசிவிடுவது போன்றும் தோன்றியுள்ளது. இதனால் அதனை சரிசெய்துக்கொண்டார். இதனால் முதல் ஓவரிலேயே சில நிமிடங்கள் ஆட்டம் பாதிப்பானது.
நடுவர் ஆத்திரம்
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த கள நடுவர், ஷமியிடம் உடனடியாக பவுலிங்கை தொடங்குமாறு கூறினார். எனினும், தனது நிலையை அம்பயருக்கு விளக்கி ஷமி நினைத்ததை செய்துவிட்டார். இந்த செயலுக்கான விளைவு போட்டி முடிந்த பிறகு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications