
தோனியின் நிதானம்
இந்த போட்டியில் ஒட்டுமொத்த சென்னை அணி வீரர்களும் ஏமாற்றிய போதும், தனி மரமாக அணியை தூக்கி நிறுத்தியது தோனி தான். 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்களை சேர்த்து தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார. இதனால் தான் 36 ரன்களுக்கு சுருண்டிருக்க வேண்டிய சிஎஸ்கே 97 ரன்கள் வரை சென்றது.

சுவாரஸ்ய நிகழ்வு
இந்நிலையில் போட்டியில் மட்டுமல்லாமல் போட்டி முடிந்த பிறகும் தோனி ஆச்சரியம் தந்துள்ளார். அதாவது போட்டி முடிந்தவுடன் சிஎஸ்கே டக் அவுட் அருகே அதிக கூட்டம் இருந்தது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்த போதுதான் தோனியின் ஆட்டோகிராஃபை வாங்க எதிரணி வீரர்கள் கூட வரிசையில் காத்திருந்தனர்.

தோனியின் பரிசு
மும்பை அணி இளம் வீரர்கள் மற்றும் சிஎஸ்கேவின் ஊழியர்கள் தோனியின் ஆட்டோகிராஃபை கேட்டனர். இதனையடுத்து சிஎஸ்கே ஜெர்ஸியில் ஒன்றன் பின் ஒன்றாக கையெழுத்திட்டு ஒவ்வொரு வீரருக்கும் தோனி பரிசாக கொடுத்தார். அவர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video

தோனியின் அடுத்த ப்ளான்
41 வயதை நெருங்கி வரும் தோனி, அடுத்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. இதுகுறித்து பேசியிருந்த அவர், நான் நிச்சயம் அடுத்த சீசனில் சிஎஸ்கே ஜெர்ஸியுடன் இருப்பேன். ஆனால் எப்படி இருப்பேன் என்பது தெரியாது எனக்கூறி சென்றார். இதனால் அவர் அடுத்தாண்டு சிஎஸ்கே ஆலோசகராக செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications