மும்பை அணி வெற்றி
நேற்றைய போட்டி டெல்லி அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக அமைந்திருந்தது. அதாவது மும்பை அணியை வீழ்த்தினால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நிலை இருந்தது. மும்பை அணி ஃபார்மில் இல்லாததால் வீழ்த்திட முடியும் என்ற நம்பிக்கையில் டெல்லி இருந்தது. ஆனால் கடும் போராட்டத்திற்கு பிறகு மும்பை வெற்றி கண்டது.
Recommended Video
ரசிகர்களின் பாராட்டு
டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோற்றதால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. ஆர்சிபி அணிக்காக தான் மும்பை அணி போராடி வெற்றி கண்டுள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் மும்பை - ஆர்சிபி நண்பர்கள் என மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
உண்மை காரணம் என்ன
இந்நிலையில் உண்மையில் மும்பை அணி தனது பழைய பகையை தீர்த்துக்கொண்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருந்த மும்பை அணி, கடைசி லீக் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தினால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் டெல்லி அணி அதற்கு அப்போது ஒத்துழைக்கவில்லை.
அதே பேட்டிங்
அப்போட்டியிலும் முதலில் ஆடிய டெல்லி அணி 174 ரன்களை குவித்தது. ஆனால் மும்பை அணி 163 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டாகி பரிதாபமாக வெளியேறியது. இதே போல இன்றும் டெல்லி அணி நிர்ணயித்த 160 என்ற இலக்கை அசால்டாக விரட்டி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.