For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த 48 மணி நேரம்..!! ICU-வில் இருக்கப்போகும் சிஎஸ்கே அணி..வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய முடிவு

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த 48 மணி நேரம் தீவிர சிகிச்சை பிரிவு போன்று முக்கியமான காலக்கட்டமாக மாறவுள்ளது.

இலங்கை தொடர் முடிந்ததை அடுத்து அனைவரின் கவனமும் தற்போது ஐபிஎல் பக்கம் திரும்பியுள்ளது. 15வது ஐபிஎல் திருவிழா வரும் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது.

இதற்காக அனைத்து அணிகளும் மஹாராஷ்டிராவை சுற்றியுள்ள மைதானங்களில் பயிற்சியை தொடங்கிவிட்டன.

சிஎஸ்கேவுக்கு சிக்கல்

சிஎஸ்கேவுக்கு சிக்கல்

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத் நகரில் உள்ள லால்பாய் மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். தோனியின் தலைமையில் மிக பலமான அணியாக சிஎஸ்கே இருந்தாலும், அடுத்த 48 மணி நேரம் தான் சிஎஸ்கேவின் வெற்றிகளை நிர்ணயிக்கப் போகிறது என்ற சூழல் ஊருவாகியுள்ளது. இதற்கு காரணம் பிசிசிஐ தான்.

என்ன காரணம்

என்ன காரணம்

ஏனென்றால் சிஎஸ்கேவின் இரு முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் பவுலர் தீபக் சஹார் ஆகியோர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளனர். சஹாருக்கு காலில் தசை நார் கிழிவும், ருதுராஜுக்கு கையில் காயமும் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே ஐபிஎல் தொடருக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பிசிசிஐ -ன் அறிவிப்பு

பிசிசிஐ -ன் அறிவிப்பு

மெகா ஏலத்தின் போது சிஎஸ்கே பெரியளவில் பணத்தை கொட்டி ரூ. 14 கோடிக்கு தீபக் சஹாரை வாங்கியது. இதே போல ருதுராஜ் ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டார். இவர்கள் இருவரின் உடற்தகுதி தேர்வு முடிவுகள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்படும் என பிசிசிஐ கூறியுள்ளது. இதனால் சென்னை அணி பதற்றத்துடன் எதிர்நோக்கி காத்துள்ளது.

வாய்ப்பு குறைவு

வாய்ப்பு குறைவு

எனினும் இதில் தீபக் சஹார் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகிறது. ஏனென்றால் தசை நார் கிழிவு ஏற்பட்டால், குறைந்தபட்சம் ஒன்றரை மாதம் ஓய்வெடுக்க வேண்டியிருக்கும். அதன்படி பார்த்தால் தீபக் சஹார் முதல் பாதி ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகலாம்.

Story first published: Wednesday, March 16, 2022, 14:58 [IST]
Other articles published on Mar 16, 2022
English summary
BCCI to decide Chahar and gaikwad's fate ahead of IPL 2022, IPL 2022: next 48 hours is very Important for CSk BCCI to decide Chahar and gaikwad's fate ahead of IPL 2022, IPL 2022: next 48 hours is very Important for CSk
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+