கேப்டன் மாற்றம்
மேலும் பஞ்சாப் அணி விளையாடிய 5 போட்டியில் 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, தற்போது புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மாயங் அகர்வால் சிறப்பாகவே செயல்பட்ட போதும், ஏன் தொடரின் பாதியில் அவர் மாற்றப்பட்டுள்ளார் என்று ரசிகர்களும் புலம்பினர்.
ஷிகர் தவான் விளக்கம்
இதற்கு விடை அளித்த ஷிகர் தவான், பயிற்சியின் போது மாயங் அகர்வாலுக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் அவர் ஓய்வில் இருக்கிறார். அவருக்கு பதிலாக இன்று நான் கேப்டனாக களமிறங்கி உள்ளேன் என்று தவான் பதில் அளித்தார். ஆனால் இது நம்பும் படி இல்லை என்றும், எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக்கை பயன்படுத்துவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
14 முறை மாற்றம்
ஏன் என்றால் தொடரின் நடுவில் கேப்டனை மாற்றுவது பஞ்சாப் அணிக்கு ஒன்றும் புதுசு அல்ல, ஏற்கனவே முரளி விஜய், அஸ்வின் போன்ற வீரர்களை மாற்றிய வரலாறு அந்த அணிக்கு உள்ளது. ஐபிஎல் தொடரே 15 சீசன் தான் நடந்துள்ளது, ஆனால் அதற்குள் பஞ்சாப் அணி 14 முறை கேப்டனைகளை மாற்றி சாதனை படைத்துள்ளது.
பஞ்சாப் சரிவு
சரி, இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக களமிறங்கிய ஷிகர் தவானும், 11 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மாயங் அகர்வாலுக்கு பதிலாக களமிறங்கிய பிராப்சிம்ரன் சிங்கும் 14 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் பஞ்சாப் அணி சரிவை சந்தித்துள்ளது.