
கோல்டன் டக்
ஆர்சிபி வீரர் அனுஜ் ராவத் 4 ரன்கள் எடுத்திருந்த போது ஷமிரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய விராட் கோலி முதல் பந்திலேயே சமிரா ஓவரில் கோல்டன் டக் ஆனார். இதனால் ஆர்சிபி 7 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து தடுமாறியது,

40 பந்தில் 50
இதன் பின்னர் களத்துக்கு வந்த மேக்ஸ்வெல் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 23 ரன்கள் விளாசி குர்னல் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் , மறு முனையில் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் டுபிளஸிஸ் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார்.

டுபிளஸில் 96
இந்த நிலையில், பிரபுதேசாய் 10 ரன்களிலும், சபாஷ் அகமது 22 பந்தில் 26 ரன்களும் ஆட்டமிழக்க, டுபிளஸிஸ் 40 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். அதன் பிறகு டுபிளஸில் ருத்ரதாண்டவம் ஆடினார். 11 பவுண்டரிகளையும், 2 சிக்சர்களையும் பறக்கவிட்ட அவர் 64 பந்துகளில் 96 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

182 ரன்கள் இலக்கு
இறுதியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 8 பந்தில் ஒரு சிக்சருடன் 13 ரன்களை குவித்தார். இதனால், ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி 160 ரன்கள் தான் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 ரன்களை கூடுதலாக அடித்துள்ளது. இந்த 20 கூடுதல் ரன்களை அடிக்க தான் சிஎஸ்கே தவறி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











