For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்சல் பட்டேலுக்கு நிகழ்ந்த சோகம்..மும்பையை வென்ற பிறகு வந்த அதிர்ச்சி செய்தி.. அணியை விட்டு விலகல்

மும்பை: ஐபிஎல் மூலம் அனைத்தையும் பெற்ற இந்திய வீரர் ஹர்சல் பட்டேலுக்கு, தற்போது அதே ஐபிஎல் மூலம் ஒரு சோகம் நிகழ்ந்தது.

2009ஆம் ஆண்டு உள்ளூர் முதல்தர போட்டியில் விளையாட தொடங்கினார் ஹர்சல் பட்டேல். 10 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடியும் அவருக்கு ஒரு முறை கூட இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அவ்வளவு ஏன் ஹர்சல் பட்டேல் என்ற ஒரு வீரர் இருக்கிறார் என்று கூட ரசிகர்களுக்கு தெரியாது.

அமெரிக்க வாய்ப்பு

அமெரிக்க வாய்ப்பு

ஆனால் உள்ளூர் போட்டியில் நன்றாக விளையாடுகிறார் என்பதை அறிந்த ஐபிஎல் அணிகள் அவரை 2010, 11ஆம் ஆண்டே ஏலத்தில் எடுத்தது. ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்துடன் அமெரிக்காவில் சென்று விளையாட ஹர்சலுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இடம் கிடைக்காது

இடம் கிடைக்காது

எனினும் அந்த வாய்ப்பை உதறிவிட்டு தொடர்ந்து ரஞ்சி போட்டியில் விளையாடினார். 2019 ரஞ்சி சீசன் போட்டியில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தி , ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ஹர்சல் பட்டேல் படைத்தார். இதனையடுத்து அவருக்கு ஐபிஎல் தொடரில் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பு கிடைத்தது.

அனைத்தும் கிடைத்தது

அனைத்தும் கிடைத்தது

இதன் பின்னர் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி ஹர்சல் பட்டேல் பர்பிள் கேப்பை வென்றார். இதனால் இந்திய அணியில் விளையாட ஹர்சல் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைத்தது. நேற்று கூட ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி விளையாடியது. அப்போது மும்பை அணி பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்தது. ஆனால், அதே மும்பை அணி 62 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதற்கு முக்கிய காரணம், ஹர்சல் பட்டேல் தான்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மாவை ஹர்சல் பட்டேல் வீழ்த்தினார். 4 ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 23 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஆர்சிபி அணிக்கு பெரிய வெற்றியை தேடி தந்தார். ஆனால் அந்த வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே ஹர்சல் பட்டேலுக்கு ஒரு சோக செய்தி வந்து சேர்ந்தது.

அதிர்ச்சி செய்தி

அதிர்ச்சி செய்தி

ஹர்சல் பட்டேலின் உடன் பிறந்த சகோதரி உயிரிழந்துவிட்டதாக தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. இதனால் உடைந்து போன ஹர்சல் பட்டேல், உடனடியாக பயோ பபுளிலிருந்து விலகி தனது சகோதரியின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்றுள்ளார். இதனால் ஹர்சல் பட்டேல் சிஎஸ்கேவுக்கு எதிரான அடுத்த போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. ஹர்சல் பட்டேலுக்கு ஆர்சிபி அணி வீரர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து கொண்டனர்.

Story first published: Sunday, April 10, 2022, 16:50 [IST]
Other articles published on Apr 10, 2022
English summary
IPL 2022- RCB Star Bowler Harshal Patel leaves team after Tragedy ஹர்சல் பட்டேலுக்கு நிகழ்ந்த சோகம்..மும்பையை வென்ற பிறகு வந்த அதிர்ச்சி செய்தி.. அணியை விட்டு விலகல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+