தவறுகள் என்ன
சென்னை அணியின் தோல்விக்கு முதன்மை காரணமாக பார்க்கப்படுவது பவுலிங் தான். தீபக் சஹார் இல்லாததால் முகேஷ் சௌத்ரியை வைத்து சமாளித்து வருகின்றனர். இவரும் கடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு வந்துவிட்டார். ஆனால் பேட்டிங்கில் சம்பந்தமே இன்றி ருதுராஜ் கெயிக்வாட் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
குவியும் விமர்சனங்கள்
முதல் போட்டிகளில் 2 ரன்களை மட்டுமே அடித்த ருதுராஜ், 4வது போட்டியில் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் 16 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். இதனால் இவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு, வாய்ப்புக்காக காத்துள்ள டெவோன் கான்வே, சேனாதிபதியை களமிறக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
அவசர ஆலோசனை
இந்நிலையில் இதற்காக ருதுராஜுடன் தோனி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், வரவிருக்கும் ஆர்சிபிக்கு எதிரான போட்டி தான் உனக்கு கடைசி வாய்ப்பு என்றும், அதில் சிறப்பாக ஆடா விட்டால் இனி ப்ளேயிங் 11ல் வாய்ப்பை நினைத்து பார்க்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
கெயிக்வாட்டின் துணிச்சல்
இதற்கு ருதுராஜ் கெயிக்வாட்டும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். அதாவது, அடுத்த போட்டியில் நான் சிறப்பாக ஆடவில்லை என்றால் நீக்கிவிடுங்கள் என பகிரங்கமாக கூறியுள்ளார். மேலும் மிகவும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. ருதுராஜுக்கு உத்வேகம் கொடுத்துள்ளதால், நல்ல கம்பேக் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணி அடுத்ததாக வரும் நாளை இரவு ஆர்சிபியுடன் மோதுகிறது.