
மும்பை அணியின் தேர்வு
இதில் அனைவராலும் பெரிதும் கவனிக்கப்பட்ட விஷயம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பட்டியல் தான். 5 முறை சாம்பியனான அந்த அணியில் நீண்ட நாட்களாக விளையாடிய வீரர்கள் ஒதுக்கப்படவேண்டியிருந்தது. கேப்டன் ரோகித் சர்மா முதல் தேர்வாக தக்கவைப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக பும்ரா, சூர்யகுமார் யாதவ், கெயீரன் பொல்லார்ட் ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த பாண்ட்யா சகோதரர்கள், ட்ரெண்ட் போல்ட், இஷான் கிஷான் ஆகியோர் கழட்டிவிடப்பட்டனர்.

ரோகித் அதிருப்தி
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தக்கவைப்புகள் அதிர்ச்சியாக இருந்ததாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியின் தக்கவைப்பு பட்டியலை தேர்வு செய்வது மிக கடினமாக இருந்துள்ளது. எங்கள் அணியில் நிலையான வீரர்கள், மட்டும் மிக அற்புதமான வீரர்கள் உள்ளனர். அவர்களை எல்லாம் தற்போது ஏலத்தில் விட்டது மனவருத்தமாக உள்ளது.

நம்பிக்கை
பாண்ட்யா சகோதரர்கள், இஷான், போல்ட் ஆகியோர் மும்பை அணிக்காக பல்வேறு முக்கியமான விஷயங்களை செய்தவர்கள். நிறைய நல்ல நியாபகங்களை உருவாக்கியவர்கள். அவர்களை வெளியேற்றியது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. தற்போது தக்கவைக்கப்பட்டுள்ள நாஙகள் 4 பேரும் மீண்டும் ஒரு தரமான அணியை உருவாக்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களின் தற்போதைய இலக்கு மெகா ஏலம் மட்டும் தான். சரியான இடத்திற்கு சரியான வீரர்களை தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

வீரர்களின் ப்ளான்
மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாண்ட்யா சகோதரர்கள் அடுத்தபடியாக அகமதாபாத் அணியால் அணுகப்பட்டுள்ளனர். அவர்களின் சொந்த ஊர் அணி என்பதால் அவர்கள் அங்கு செல்வதற்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. சூர்யகுமார் யாதவ் மற்றும் ட்ரெண்ட் போல்ட்-ஐ மீண்டும் மும்பை அணியே ஏலத்தில் எடுக்க தீவிரம் காட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications