Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி ஸ்டைலை தான் பாண்ட்யா செய்தார்.. உறுதி செய்யும் ஆதாரங்கள் உள்ளன.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் புகழாரம்!!

மும்பை: ஹர்திக் பாண்ட்யா, தோனியின் வழியில் சென்றதால் தான் கேப்டன்சியில் ஜொலிக்க முடிந்ததாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

ஐபிஎல் 15வது சீசனில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

குஜராத் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தான்.

 ஹர்த்திக் கம்பேக்

ஹர்த்திக் கம்பேக்

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னதாக காயத்தால் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியே அவரை கழட்டிவிட்டது. ஆனால் இந்தாண்டு தரமான கம்பேக் கொடுத்தார். பேட்டிங்கில் 15 இன்னிங்ஸில் 487 ரன்களை குவித்துள்ளார். பந்துவீச்சிலும் 8 முக்கிய விக்கெட்களை சாய்த்து அசத்தியுள்ளார்.

 கேப்டன்சி சிறப்பு

கேப்டன்சி சிறப்பு

கேப்டனாகவும் தனது அணிக்கு கோப்பை வென்று கொடுத்துவிட்டார். பவுலிங்கில் பாண்ட்யா செய்யும் மாற்றங்கள் மற்றும் பேட்டிங் ஆர்டரில் முன்கூட்டியே பொறுப்பை ஏற்றுக்கொண்டு சென்றது என ஹர்திக் பாண்ட்யா ஜொலித்தார். இதே போன்று களத்தில் அவர் அமைதியாக செயல்பட்ட ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருந்தது.

தோனியை போன்றே கேப்டன்சி

தோனியை போன்றே கேப்டன்சி

இந்நிலையில் ஹர்திக் மற்றும் தோனி ஒன்று தான் என மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். அதில், ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி எம்.எஸ்.தோனியை போன்றே இருந்தது. ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப திடீரென திட்டத்தை மாற்றி அமைப்பார். கேப்டன்சியை மிகவும் உற்சாகத்துடனும், நிதானமாகவும் கையாண்டதில் இது தெரியவந்தது.

உதாரணம் இதோ

உதாரணம் இதோ

இறுதிப்போட்டியில் கூட ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப பாண்ட்யா சரியான முடிவை எடுத்தார். அதாவது சாய் கிஷோருக்கு வழக்கமான ஆர்டரில் ஓவரை கொடுக்காமல் 16வது ஓவரில் தான் கொடுத்தார். இதே போன்று நம்பர் 4வது வீரராக களமிறங்கி எந்த இடத்தில் அதிரடி வேண்டும், எங்கு நிதானம் வேண்டும் என நன்கு தெரிந்து ஆடினார் என மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

Recommended Video

MI vs DC ஆட்டத்தை பார்த்து கொண்டாடிய RCB வீரர்கள் | #Cricket
கேப்டன் பதவி

கேப்டன் பதவி

ஐபிஎல் தொடரில் காட்டிய சிறப்பான ஆட்டம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா அடுத்ததாக இந்தியா - தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளார். அடுத்ததாக அயர்லாந்து தொடரிலும் கேப்டனாக செயல்படவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Monday, May 30, 2022, 20:19 [IST]
Other articles published on May 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+