
நோ பால்
புது பந்தில் புவனேஸ்வர் குமார் நன்றாக ஸ்விங் செய்ய பட்லர் அதனை எதிர்கொள்ள தடுமாறினார். முதல் ஓவரின் 5வது பந்தில் ஜாஸ் பட்லர் விக்கெட்டை புவனேஸ்வர் குமார் வீழ்த்தினார். ஆனால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டதால் , பட்லருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதே போன்று ஐதராபாத் அணி வீரர்கள் தொடர்ந்து நோ பாலாக வீசினர்.

அதிரடி தொடக்கம்
குறிப்பாக 4 ஓவரில் 4 நோ பால்கள் ஐதாராபாத் அணி வீசியது. எனினும் சிறப்பாக விளையாடிய ஜாஸ் பட்லர் 3 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 28 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார். ஜெய்ஷ்வாலும் இளங்கன்று பயன் அறியாது என்ற வகையில் பெரிய ஷாட்களை ஆடி 20 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

5 சிக்சர்
இதன் பின்னர் 100வது போட்டியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரசிகர்களுக்கு பார்டி வைத்தார். முதல் பந்து முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சர் என விரட்டினார். 25 பந்தில் அரைசதம் விளாச சஞ்சு சாம்சன், 5 இமாலய சிக்சர்களை விரட்டினார்.

இமாலய இலக்கு
சஞ்சுக்கு போட்டியாக படிக்கல்லும் அதிரடியாக விளையாடினார். இறுதியில் சிம்ரன் ஹேட்மர் 13 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்சர்கள் அடங்கும்.இதனால் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 210 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்தது. இது புனே மைதானத்தில் அடிக்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோராகும்.


Click it and Unblock the Notifications











