
தொடக்கமே அதிர்ச்சி
இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் மிகப்பெரிய தூணே கேப்டன் வில்லியம்சன் தான். எனவே அவரின் விக்கெட்டிற்காக தனி ஸ்கெட்ச் போட்ட ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி மூலம் வில்லியம்சனை 5 ரன்களுக்கு வெளியேற்றினார். அவரை தொடர்ந்து சீனியர் வீரர் ராகுல் திரிபாதியும் 16 ரன்களுக்கு அவுட்டானார்.

இளம் வீரர் தந்த ட்விஸ்ட்
இதனால் ஐதராபாத் அணி இனி அவ்வளவு தான் என நினைத்த போது, அபிசேஷ் சர்மா பெரும் ஷாக் கொடுத்தார். தூண் போன்று நிலைத்து நின்ற அவர் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 65 ரன்களை விளாசித் தள்ளினார். ஹர்திக் வகுத்த அத்தனை வியூகத்தையும் அந்த 21 வயது வீரர் தகர்த்ததால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.

மற்றொரு அதிர்ச்சி
அபிசேக்கிற்கு உறுதுணையாக விளையாடிய ஏய்டன் மர்க்ரம் 40 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். இதனால் 19 ஓவர்களில் ஐதராபாத் அணி 170 ரன்களை குவித்தது. இந்நிலையில் கடைசி ஓவரில் தான் பாண்ட்யாவுக்கு மற்றொரு ஷாக் காத்திருந்தது. அதுவும் இதுவரை ஐபிஎல்-ல் பேட்டிங்கே செய்யாத ஒரு வீரரால் தான்.
Recommended Video

கடைசி ஓவர் அதிரடி
கடைசி ஓவரை லாக்கி ஃபெர்க்யூசன் வீச, புதுமுக வீரர் ஷஷாங்க் சிங் களத்திற்கு வந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். அந்த ஓவரில் 6,0,1,6,6,6 என ரசிகர்களுக்கு சரவெடி காத்திருந்தது. இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 195 ரன்கள் குவித்தது.


Click it and Unblock the Notifications