
ஐபிஎல் போட்டிகள்
கடந்தாண்டு பாதி போட்டிகள் இந்தியாவிலும், பாதி போட்டிகள் அமீரகத்திலும் நடந்ததால் அனைத்து அணிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே இந்த முறை தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே போட்டிகள் எங்கு நடைபெறும் என்பதை முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. இதற்காக பிசிசிஐ அவசர

கங்குலியின் அறிவிப்பு
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சவுரவ் கங்குலி தடாலடி முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் எவ்வளவு இருந்தாலும் சரி, இந்தியாவில் தான் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். இதில் உறுதியாக உள்ளோம். இந்த முறை போட்டிகளை மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டுமே நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ப்ளே ஆஃப்
லீக் போட்டிகள் மகாராஷ்டிராவில் நடந்தாலும், ப்ளே ஆஃப் சுற்றுகள் அனைத்தும் அகமதாபாத் நகரத்தில் நடைபெறும். கொரோனா பாதிப்பு உச்சத்திற்கு சென்றால் மட்டுமே மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும், இல்லையென்றால் இந்த திட்டம் தான் கடைசி வரை இருக்கும் என கங்குலி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

வீரர்கள் அதிருப்தி
கங்குலியின் இந்த துணிச்சல் முடிவு வீரர்களுக்கு தான் பயத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த முறை இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரில் பல இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனால் அவர்களுக்கு சில சர்வதேச போட்டி வாய்ப்புகளும் தவறின. எனவே இந்த முறையும் அப்படி ஆகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இதேபோல தென்னாப்பிரிக்காவில் ரம்மியமான சூழல் நிலவுவதால் அங்கு ஐபிஎல் நடக்கும் என காத்திருந்தனர். ஆனால் இந்த முறையும் இந்தியாவில் நடத்தினால், பயோ பபுள் என்ன ஆகப்போகிறது என்ற கவலையும் உள்ளது.

ஐபிஎல் அணிகள் அழுத்தம்
ஐபிஎல் தொடரை நடத்த அமீரகத்துடன் சேர்ந்து இந்த முறை தென்னாப்பிரிக்கா, இலங்கை நாடுகளும் தேர்வுகளாக உள்ளன. ஆனால் அனைத்து அணிகளும் போக்குவரத்து செலவுகளை குறைக்க இந்தியாவில் தான் போட்டிகளை நடத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளன. இதன் காரணமாக தான் பிசிசிஐ-ம் ரிஸ்க் எடுக்க துணிந்திருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











