5 டக் அவுட்
பஞ்சாப் அணிக்காக கடந்த முறை நிக்கோலஸ் பூரான் விளையாடிய போது 85 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் 5 டக்களும் அடங்கும். அதிரடி வீரர் என்ற பெயர் எடுத்த பூரான் குக் வித் கோமாளியில் வரும் கோமாளி போல் விளையாடி பஞ்சாப் அணி ரசிகர்களை வெறுப்பேற்றினார். இதனால் பஞ்சாப் அணி அவரை தூக்கி எறிந்தது.
விமர்சனம்
இதனால் காலத்துக்கும் ஐபிஎல் தொடருக்கு திரும்ப முடியாது என்று நினைத்த பூரானை 10 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. இதனால் புதிய உத்வேகம் பெற்றுள்ள பூரான், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கடந்த சீசனில் சரியாக விளையாடவில்லை. அப்போது ஊடகங்களும், ரசிகர்களும் என்னை கடுமையாக விமர்சித்தார்கள்.
சரிவு
இது சகஜம் தான். அனைத்து வீரர்களுக்கும் தங்களது கேரியரில் இது போன்ற சரிவு ஏற்படும். அது தான் கடந்த முறை எனக்கும் நிகழ்ந்தது. ஒரு மோசமான சீசன் தாம் யார், எப்படிபட்ட வீரர் என்பதை தீர்மானிக்காது ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து நிறைய கற்று கொண்டேன், இம்முறை நல்ல உத்வேகத்துடன் இருக்கிறேன்.
நம்பிக்கை
ஐதராபாத் அணி என் மீது பெரும் நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்துள்ளார்கள். நான் எப்போதும் போல் சிறப்பாக, என் முழு திறனையும் வெளிப்படுத்தி என் அணிக்காக விளையாடுவேன். சர்வதேச போட்டியிலும் நான் சிறப்பாக விளையாடுகிறேன். நல்ல ஃபார்மிலும் இருக்கிறேன் என்று நிக்கோலஸ் பூரான் கூறினார்.