
இந்திய வீரர்களுக்கு சிக்கல்
இந்தாண்டு ஐபிஎல் தொடர் சில இந்திய வீரர்களுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஃபிட்னஸ் பிரச்சினையால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள முன்னணி வீரர்கள், இதனை வைத்து தான் கம்பேக் கொடுக்கவுள்ளனர். அதில் மிகவும் முக்கியமானவர் தான் யார்க்கர் கிங் டி.நடராஜன்.

பறிபோன வாய்ப்புகள்
இந்திய அணியில் அசத்தி வந்த நடராஜன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். சையது முஷ்டக் அலி, விஜய் ஹசாரே போன்ற தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால், பிசிசிஐ தேர்வுக்குழுவின் கவனத்தை பெற முடியவில்லை. எனினும் அவர் மீது ஐதராபாத் அணி அதீத நம்பிக்கை வைத்து வாங்கியுள்ளது.
உடைந்த ஸ்டம்ப்கள்
இந்நிலையில் அதற்கு தகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளார். டி.நடராஜன் பவுலிங் பயிற்சி செய்யும் வீடியோவை ஐதராபாத் அணி வெளியிட்டுள்ளது. அதில் வெறிகொண்டு பவுலிங் வீசும் நடராஜன் கொஞ்சம் கூட குறிமாறாமல் யார்க்கர் வீசுகிறார். மேலும் ஒரு பந்தில், ஸ்டம்ப் இரண்டாக உடைந்து பறந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த சீசனில் தரமான சம்பவம் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஸ்டெயின் தான் காரணம்
நடராஜனின் இந்த வேகத்திற்கு பின்னால் தென்னாப்பிரிக்க புயல் டேல் ஸ்டெயின் இருக்கிறார் எனக்கூறலாம். அந்த அணியின் வேகப்பந்துவீச்சுக்கு என ஸ்பெஷல் பயிற்சியாளராக ஸ்டெயின் இணைந்துள்ளார். அவரின் ஆலோசனைகளின் படி இந்தாண்டு நடராஜனை மற்றொரு லெவலில் வைத்து பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











