
ஃபார்முக்கு வந்த கோலி
இன்றைய ஆட்டத்தில் ஸ்பெஷல் என்னவென்றால் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இவர் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 58 ரன்களை அடித்து அசத்தினார். இதனால் இன்றைய போட்டியிலும் சிஎஸ்கேவுக்கு தலைவலி கொடுப்பார் எனத் தெரிகிறது.

கோலி சாதனை
இந்நிலையில் இன்றைய போட்டியில் கோலி பிரமாண்ட சாதனை ஒன்றும் படைக்க காத்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிரான விராட் கோலி இதுவரை 949 ரன்களை அடித்துள்ளார். இன்று மட்டும் 51 ரன்களை அடித்துவிட்டால், ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கேவுக்கு எதிராக 1000 ரன்களை அடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்னதாக ஷிகர் தவான் இதனை படைத்துள்ளார்.

தீவிர பயிற்சி
சிஎஸ்கேவுடன் மோதுவதற்காக இன்று விராட் கோலி தனக்கு பிடித்தமான பளுதூக்கும் உடறபயிற்சியை மனைவி அனுஷ்கா சர்மாவுடன் மேற்கொண்டார். மிகவும் அட்டகாசமான ஃபிட்னஸுடன் உள்ள கோலி, பளுதூக்கி அதனை கீழே இறக்கும் காட்சியை பார்த்த ரசிகர்கள் இன்று தரமான சம்பவம் உள்ளது என கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video

தோனியும் சாதனை
இது ஒருபுறம் இருக்க, தோனியும் இன்று முக்கிய சாதனையை படைக்கவுள்ளார். ஆர்சிபி அணிக்கு எதிராக தோனி இதுவரை 836 ரன்களை குவித்துள்ளார். இதில் 46 சிக்ஸர்களும் அடங்கும். இன்று 4 சிக்ஸர்களை மட்டும் அடித்துவிட்டால், ஐபிஎல்-ல் ஒரு அணிக்கு எதிராக 50 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.


Click it and Unblock the Notifications











