ஆர்சிபி புதிய கேப்டன் யார்?.. விராட் கோலியே கொடுத்த சூப்பர் அப்டேட்.. ரசிகர்கள் கொண்டாட்டம் - வீடியோ
பெங்களூரு: ஆர்சிபி கேப்டன்சி குறித்து விராட் கோலியே ரசிகர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
Recommended Video
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக சில அணிகள் பயிற்சிகளையே தொடங்கிவிட்டன.
ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மட்டும் இன்னும் புதிய கேப்டன் யார் என்பதையே அறிவிக்கவில்லை.

புது கேப்டன் யார்
9 ஆண்டுகளாக கேப்டன்சி செய்தும் ஒரு கோப்பை கூட வென்றுக்கொடுக்காத விராட் கோலி பதவி விலகினார். இதனையடுத்து தினேஷ் கார்த்திக், டூப்ளசிஸ் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. வரும் மார்ச் 12ம் தேதியன்று அறிவிப்பும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நேர திருப்பம்
ஆனால் இன்று தான் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. அதாவது விராட் கோலி கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஆர்சிபி நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவே இல்லை எனத்தெரிகிறது. மீண்டும் அவரையே கேப்டனாக செயல்படுமாறு வற்புறுத்தி வருவதாகவும் ஆர்சிபி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீடியோ
இந்நிலையில் இதனை கோலியே உறுதி செய்துள்ளார். இதுகுறித்து புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கோலி, உங்களுக்காக சில அப்டேட்களை வழங்கவுள்ளேன். மிகச்சிறந்த ஐபிஎல் சீசனை எதிர்நோக்கியுள்ளேன். புத்துணர்ச்சி பெற்ற அணியுடன் விளையாட ஆவலோடு இருக்கிறேன்.. அதற்கு காரணம் என்னவென்றால், என கூறுவதற்குள், வீடியோ நின்றுவிடுகிறது. மார்ச் 12ம் தேதி முழுமையான வீடியோ வெளியாகும் எனத்தெரிவித்துள்ளது.
புகைப்பட ஆதாரங்கள்
இதன் மூலம் மீண்டும் கோலியே கேப்டனாகிறார் என்பது உறுதியாகியுள்ளது.சமீபத்தில் கேப்டன் அறிவிப்புகாக ஆர்சிபி சில உருவக்கட்டவுட்களை வெளியிட்டது. அது விராட் கோலியின் உருவம் தான். இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications