
பலமான ராயல்ஸ்
பட்லர், சஞ்சு சாம்சன், படிக்கல், ஹெட்மயர் போன்ற பலமான பேட்டிங் வரிசையை கொண்ட ராஜஸ்தான் அணி, முதல் ஆட்டத்தில் 210 ரன்கள் அடித்தும், 2வது ஆட்டத்தில் 193 ரன்கள் அடித்தும் வென்றது, டாஸை வென்று 2வதாக பேட்டிங் செய்யும் அணி தான் வெல்லும் என்ற நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்து வென்றது.

மிரட்டலான பந்துவீச்சு
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சும் மிரட்டலாகவே உள்ளது. அஸ்வின், சாஹல் கூட்டணி சுழற்பந்துவீச்சிலும், பிரஷித் கிருஷ்ணா, பவுல்ட் கூட்டணி வேகப்பந்துவீச்சிலும் கலக்கி வருகின்றனர். கடந்த சீசன் முதல் தற்போது வரை ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை சாஹல் படைத்துள்ளார்.

ஆர்சிபி
பெங்களூரு அணி விளையாடிய 2 போட்டியும் அந்த அணிக்கு ரோலர் கோஸ்டர் ரைடு போலவே உள்ளது. முதல் போட்டியில் பந்துவீச்சு சொதப்ப, 2வது ஆட்டத்தில் பேட்டிங் காலை வாரியது எனினும் ஆர்சிபி வென்றது. இதனால் ராஜஸ்தானை எதிர்கொள்வது அவ்வளவு எளிதாக ஆர்சிபிக்கு இருக்காது.

விராட் சாதனை
இதுவரை இவ்விரு அணிகளும் மோதிய 24 போட்டியில் ஆர்சிபி 12 போட்டியிலும், ரொஜஸ்தான் 10 போட்டியிலும் வென்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்தால் ஐபிஎல் தொடரில் 550 பவுண்டரி மற்றும் 200 சிக்சர் அடித்த ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை படைப்பார்.


Click it and Unblock the Notifications