
தோனியின் விக்கெட்
இதில் தோனியின் விக்கெட் தான் சர்ச்சையை கிளப்பியது. சென்னை அணி 133 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 6வது விக்கெட்டிற்கு களமிறங்கிய தோனி வெறும் 2 ரன்களுக்கு வெளியேறினார். ஹாசல்வுட் வீசிய ஷார்ட் பாலை, தோனி டீப் மிட் விக்கெட்டில் அடிக்க முயன்றார். அப்போது ராஜத் பட்டிதர் சிறப்பாக கேட்ச் பிடித்து அசத்தினார்.

கோலியின் செயல்
இந்நிலையில் தோனி விக்கெட் வீழ்ந்த பிறகு களத்தில் இருந்த ஆர்சிபி வீரர் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக கத்தினார். இதுமட்டுமல்லாமல் கைகளை ஓங்கி வீசி, தகாத சில வார்த்தைகளை உதிர்த்த வீடியோவும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.
Recommended Video

கொதிக்கும் ரசிகர்கள்
தோனி மீது பெரும் மரியாதை இருப்பதாக கூறும் விராட் கோலி, அவரின் விக்கெட்டிற்கு, இப்படி கடும் ஆக்ரோஷத்துடன் கத்தி கொண்டாடியது சரியல்ல என கூறி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் விராட் கோலிக்கு எதிராக ஹேஷ்டேக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.
Scenes after Ms Dhoni's Wicket find the difference 🙂
As a Virat Kohli fan, this behaviour is unexpected from him. He could've celebrated the wicket by not using this foul language. On the field, behaviour matters in the game of cricket. pic.twitter.com/Ulwi1AisvS — Rahul (Iamrahul8787) May 4, 2022 '>
கோலி தரப்பு நியாயம் என்ன
தோனி களத்தில் இருந்த போது கடைசி 12 பந்துகளில் 38 ரன்கள் தேவைப்பட்டது. தற்போது தோனி நல்ல ஃபார்மில் இருப்பதால், மும்பைக்கு எதிராக வென்றது போன்று, அதிரடி காட்டி வெற்றி பெற செய்துவிடுவார். அப்படிப்பட்ட வீரரை விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் தான் கோலி உணர்ச்சிவசப்பட்டு விட்டார் என விளக்கம் அளிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications