
அனுபவம் இல்லை
நடப்பு சீசனில் டுபிளஸிஸ் புதிய கேப்டனாக களமிறங்குகிறார். டேவில்லியர்ஸ் ஓய்வு பெற்று விட்டார். கேஎஸ் பரத், படிக்கல் , சாஹல் ஆகியோர் வேறு அணிக்கு சென்றுவிட, பெங்களூரு அணி புதிய அணியை கட்டமைத்து விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அனுபவம் இல்லாத அணியை வைத்து தான் ஆர்சிபி இம்முறை ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளது.

கோலி ஜாலி
ஆனால் இதை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக உள்ளார் முன்னாள் கேப்டன் விராட் கோலி. குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு நேற்று தான் அணியின் பயிற்சி முகாம்க்கு கோலி திரும்பினார். அப்போது பேசிய விராட் கோலி, இந்த தொடரில் பொறுப்புகள் இல்லாமல், எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக விளையாட உள்ளேன்.

நம்பிக்கை
என்னுடை வாழ்க்கையை நான் மிகவும் நெசிக்கிறேன். எனக்கு குடும்பமும் வந்துவிட்டது. அழகான மகள் உள்ளார். அவர் வளர்வதை பார்த்து ஜாலியாக இருக்கிறேன், குடும்பத்தோடு நேரத்தை செலவிடுகிறேன்,அதே சமயம் எனக்கு பிடித்த கிரிக்கெட்டையும் விளையாடுகிறேன். நல்ல மனநிலையில் இருப்பதால் இம்முறை நன்கு ரன் குவிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

டுபிளஸிஸ்க்கு பாராட்டு
பெங்களூரு அணியை பொறுத்தவரை, டுபிளஸில் நல்ல அனுபவ வீரர். அவரை கேப்டனாக்க வேண்டும் என்று தான் அவரை ஏலத்தில் எடுத்தோம். டுபிளஸிஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இம்முறை அவர் பல சாதனைகளை புரிவார் என நம்புகிறேன். ஆர்சிபி அணிக்கு எப்போதும் போல் உறுதுணையாக இருப்பேன். பேட்டிங்கில் ஜொலிப்பேன் என்ற நம்பிக்கையும் உள்ளது.


Click it and Unblock the Notifications