
சிஎஸ்கேவின் சோகம்
பெரும்பாலும் ப்ளேயிங் 11- ல் மாற்றம் கொண்டு வராமல் இருப்பது தான் தோனியின் வழக்கம். ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சியில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் 3 ப்ளேயிங் 11 உடன் ஆடியுள்ளனர். இதற்கு காரணம் சரியான வீரர்கள் அமையாது இருப்பதால் தான். ஆனால் மெகா ஏலத்தில் சிஎஸ்கே ஏலம் கேட்ட வீரர்கள் இன்று சிறப்பாக ஆடி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை வீரர்
அதில் முதல் நபர் மும்பை அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா. சிஎஸ்கே ஏலம் கேட்ட இந்த இளம் வீரர், தனது முதல் போட்டியில் 15 பந்துகளில் 22 ரன்களை விளாசினார். 2வது போட்டியில் 33 பந்துகளில் 61 ரன்களை குவித்து அசத்தினார். இதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

லக்னோ அணி வீரர்
இந்த பட்டியலில் 2வது இடம் தீபக் ஹூடா தான். லக்னோ அணி வீரரான இவரை சிஎஸ்கே எடுக்க கடும் போட்டி போட்டது. ஆனால் இன்று இவர் முதல் போட்டியில் 41 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 51 ரன்களை விளாசியுள்ளார்.

திரிபாதி
3வது வீரராக இருப்பவர் ராகுல் திரிபாதி தான். இவரை ஏலம் எடுக்க ரூ.8.25 கோடி வரை செலவளிக்க கடும் போட்டி போட்டது. இறுதியில் ஐதராபாத் அணி 8.50 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் திரிபாதி 30 பந்துகளில் 44 ரன்களை குவித்துள்ளார். அதுவும் இக்கட்டான சூழலில் அடித்துள்ளார்.

ராகுல் தேவட்டியா
இதில் அடுத்ததாக இருப்பவர் குஜராத் அணிக்காக விளையாடும் ராகுல் தேவட்டியா தான். சிஎஸ்கே ஆசைப்பட்டு எடுக்க நினைத்த இவர், இந்தாண்டு முதல் போட்டியில் 24 பந்துகளில் 40 ரன்களை விளாசினார். 2வது போட்டியில் 8 பந்துகளில் 14 ரன்களை அடித்தார். இப்படி தோனி ஸ்கெட்ச் போட்ட அனைத்து வீரர்களும் இன்று சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் சிஎஸ்கேவின் நிலைமை மட்டும் பரிதாபமாக உள்ளது என அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications