
ஐபிஎல் மினி ஏலம்
இதில், துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் முதல் தேர்வாக உள்ளது. அது சரிவரவில்லை என்றால் வழக்கம் போல் மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் போன்ற நகரங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனிடையே, அனைத்து ஐபிஎல் அணிகளும் எந்த வீரர்களை விடுவிக்கப்போகிறோம் என்பது குறித்து வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கெடு விதித்துள்ளது.

பிசிசிஐ கெடு
இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஷர்துல் தாக்கூர் சிஎஸ்கே அணிக்கு திரும்ப அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஷர்துல் தாக்கூரை 10 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து டெல்லி அணி வாங்கியுள்ளது.

சிஎஸ்கே மீதான கவனம்
இதே போன்று கேஎஸ் பரத், மந்தீப் சிங் ஆகியோரையும் டெல்லி அணி விடுவிக்க உள்ளது. இதனிடையே, தற்போது அனைவரின் பார்வையும் சிஎஸ்கே மீது திரும்பியுள்ளது. சிஎஸ்கே அணி ஜடேஜாவை விடுவிக்குமா, விடுவிக்காதா என்பது குறித்து நவம்பர் 15ஆம் தேதி தெரியவரும். இதே போன்று உத்தப்பா ஓய்வு பெற்றுவிட்டதால் அவரும் விடுவிக்கப்படுவார். பிராவோ, ராயூடு , கிறிஸ் ஜார்டன், ஆகியோர் இம்முறை சிஎஸ்கேவில் தொடருவதும் கேள்விக்குறியாகி உள்ளது.

மற்ற அணிகள் விவரம்
மும்பை அணியில் உனாட்கட். தைமல் மில்ஸ் ஆகியோர் விடுவிக்கப்படலாம். கொல்கத்தா அணியில் ஆரோன் பிஞ்ச், ரஹானேவும். பஞ்சாப் அணியிலிருந்து ஷாரூக்கானும் விடுவிக்கப்படலாம் என தெரிகிறது. இதனிடையே மினி ஏலத்தில் இங்கிலாந்து வீரர் சாம் கரண், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது. மினி ஏலம் ஒரு நாள் மட்டுமே நடைபெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications