
ஐபிஎல் போட்டிகள்
சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி இந்தாண்டுடன் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுவும் அவர் கூறியதை போலவே சென்னையில் தனது கடைசி போட்டியை விளையாடிவிட்டு விடைபெறவுள்ளார். எனவே இந்த முறை கோப்பையுடன் தோனி ஓய்வு பெற ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதற்கான முதற்கட்ட பணிகளை தோனி தொடங்கிவிட்டார்.

முதற்கட்ட பணிகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம்கள் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே தொடங்கவுள்ளது. மற்ற சில அணிகளும் மார்ச் முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் பயிற்சிகளை தொடங்க ஏற்பாடு செய்துள்ளன. சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் வீரர்கள் மற்றும் பெங்களூரு என்.சி.ஏவில் உள்ள வீரர்களை தவிர மற்ற அனைத்து உள்நாட்டு வீரர்கள் மட்டும் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். ஆனால் சிஎஸ்கேவில் மட்டும் தோனியும், தீபக் சஹாரும் நேரடியாக களத்தில் குதிக்கின்றனர்.

கூடுதல் பலம்
பயிற்சி முகாமின் முதல் நாளில் இருந்தே கேப்டன் எம்.எஸ்.தோனி, இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி பெறவுள்ளார். கடந்தாண்டு சரியான ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த தீபக் சஹார் இந்தாண்டு முழு பலத்துடன் களமிறங்க முன்கூட்டியே சேப்பாக்கம் செல்கிறார். இதனால் பவுலிங் துறையில் சிஎஸ்கே கூடுதல் பலம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் அணி ஏற்பாடு
இது ஒருபுறம் இருக்க ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்கவுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே பயிற்சிகளை தொடங்கிவிட்டது. உள்நாட்டு வீரர்கள் அனைவரும் பயிற்சிகளை தொடங்கிவிட்டனர். இந்தாண்டு நடைபெறும் முதல் லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் தான் மோதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி அகமதாபாத்தில் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications