சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் கே கே ஆர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 6 புள்ளிகள் உடன் பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தளபதி ஜடேஜா பந்துவீச்சில் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இரண்டு கேட்ச்களை பிடித்தார். இந்தப் போட்டியில் ஜடேஜா ரசிகர்களை க்யூட்டாக கலாய்த்த சம்பவம் தற்போது அரங்கேறியது.

கடந்த சீசனில் தோனி எப்போது பேட்டிங் செய்ய வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் ஜடேஜா ஆட்டமிழக்கும் போதெல்லாம் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமாக கத்தி கொண்டாடுவார்கள். சொந்த அணி வீரர் ஆட்டமிழக்கும் போது கத்தும் ஒரே ரசிகர்கள் சிஎஸ்கே தான் என்று பலரும் அப்போது கிண்டல் அடிப்பது உண்டு. .
பெரும்பாலும் ஜடேஜா ஆட்டம் இழக்கும் போது தான் இப்படி அமையும். ஏனென்றால் தோனி களத்திற்கு வரப்போகிறார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் இவ்வாறு கொண்டாடுவார்கள் .ஆனால் இது ஜடேஜாவுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த வேதனையை அவர் வெளிப்படையாகவே கடந்த சீசனில் கூறிவிட்டார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு மூன்று ரன்கள் தான் இருந்தது. அப்போது பேட்டிங் வரிசைப்படி ஜடேஜா தான் களத்திற்கு வர வேண்டும். ஆனால் தோனி முன்கூட்டியே தாம் வந்து பேட்டிங் செய்வதாக முடிவு எடுத்து விட்டார். ஆனால் இது ரசிகர்களுக்கு தெரியாது. மூன்று ரன்கள் தான் இருக்கப் போகிறது இதனால் தோனி வருவாரா இல்லை பேட்டிங் வரிசைப்படி ஜடேஜா வருவாரா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.