Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டனுக்கு பறந்த கேஎல் ராகுல்.. காயத்தால் மனதளவில் பாதிப்பு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சந்தேகம்

KL Rahul : ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பங்கேற்பாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. இந்தியாவில் நட்சத்திர வீரராக கே எல் ராகுல் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் லக்னோ அணியின் கேப்டன் ஆகவும் உள்ளார்.

இந்த நிலையில் கேஎல் ராகுலுக்கு கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய போது காயம் ஏற்பட்டது. அந்த காயம் தீவிரமாக இருந்ததால் அவரால் சில மாதத்திற்கு எந்த வித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க முடியாத நிலையில் இருந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் கூட கே.எல் ராகுல் கடந்த முறை பங்கேற்கவில்லை.

IPL 2024 - KL Rahul might miss few games for Lucknow super giants

இந்த நிலையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய கே எல் ராகுல் சிறப்பாக விளையாடி பட்டையை கிளப்பினார். மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அடுத்த கேப்டன் இவர்தான் என்ற அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்தார். இந்த நிலையில் ராகுல் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது மீண்டும் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் ஓய்வில் இருந்த போது ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்தில் மீண்டும் வலி இருப்பதை ராகுல் உணர்ந்தார். இந்த நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. எனினும் லேசான வலி இருப்பதாகவும் தம்மால் மனதளவில் நம்பிக்கையாக இருக்க முடியவில்லை என்றும் மருத்துவர்களும் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்பட்டு இருக்கிறார். தற்போது கே எல் ராகுல் பிசிசிஐயின் அறிவுறுத்தலின்படி லண்டன் சென்று அங்கு சிகிச்சை மேற்கொண்டு உள்ளார். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மீண்டும் வலி இருப்பதால் அங்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.

மேலும் இது மனதளவில் உள்ள சந்தேகமா என்ற பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் ராகுலின் உடல்நிலை குறித்து லக்னோ அணி தீவிரமாக கண்காணித்து வருகிறது. பிசிசிஐ மருத்துவக்குழு மற்றும் லண்டனில் ராகுலின் நிலை குறித்து அணி நிர்வாகம் கேட்டு அறிந்து வருகிறது.

ராகுல் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு உடல் தகுதியை பெற்று விடுவார் என்று நம்புவதாக லக்னோ அணி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் ராகுல் முதல் சில போட்டிகளை ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. லக்னோ அணியை பொறுத்தவரை தங்களுடைய முதல் ஆட்டத்தை வரும் 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் ராஜஸ்தானுடன் விளையாடுகிறது.

Story first published: Sunday, March 3, 2024, 7:40 [IST]
Other articles published on Mar 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+