பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி அபாரமாக பேட்டிங் செய்து கௌரவமான இலக்கை எட்டியது. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து தொடக்க வீரராக களம் இறங்கிய குயிண்டன் டிகாக் அபாரமான நான்கு பவுண்டரிகளை எடுத்து 13 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து கே எல் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல கம்பெனி கொடுத்தார்.
