மும்பை : ஐபிஎல் கிரிக்க தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசன் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக பல மாற்றங்களை செய்திருப்பது இந்த தொடர் மீதான ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.
இந்த நிலையில் மும்பைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் அது சிஎஸ்கே அணியால் மட்டுமே முடியும். இந்த நிலையில் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டில் சி எஸ் கே கேப்டன் தோனி ஒரு புதிய முடிவை எடுக்க இருப்பதாக தெரிகிறது.
