மும்பை : 2022 ஆம் ஆண்டு இறுதியில் பெரும் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் கடந்த ஒரு ஆண்டாக எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் பிழைத்தது புது உயிர் என்பது போல் மீண்டு வந்துள்ள ரிஷப் பண்ட் தற்போது முழு உடல் தகுதியை பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஒரு ஆண்டாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிஷப் பந்த் பயிற்சி செய்து வந்தார். இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் டெல்லி அணிக்காக பங்கு பெற்ற பண்ட், தற்போது அங்கு விடுமுறையில் இருந்து வருகிறார்.
