மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே இறுதிவரை நடைபெற பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த அட்டவணையை உறுதி செய்வதில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று இருக்கிறது. காரணம் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தல் பல கட்டமாக இந்தியா முழுவதும் நடைபெறும் இந்தத் தேர்தல் நடத்தப்படும் நிலையில் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதா? இல்லை பாதி வெளிநாட்டில் நடத்துவதா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் அட்டவணையை தயாரிப்பதில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
