ராஜ்கோட்: இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகவேக சதம் விளாசி இளம் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா அசத்தியுள்ளார். இதன் மூலமாக 3 வாரங்களுக்கு முன் 28 பந்துகளில் சதம் விளாசிய குஜராத் வீரர் உர்வில் படேலின் சாதனையை சமன் செய்து அபிஷேக் சர்மா வரலாறு படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் அசத்தலாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பிய அபிஷேக் சர்மா, அந்த ஃபார்மை சையத் முஷ்டாக் அலி தொடரிலும் தொடர்ந்து வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவுக்கு, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது.
