டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 62 ஆவது லீக் ஆட்டம் டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
பத்தாவது இடத்தை தவிர்ப்பதற்கான போட்டியாக இருந்த கருதப்படுவதால் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடியது. சிஎஸ்கே அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய கான்வே 10 ரன்களிலும், உர்வில் பட்டேல் டக் அவுட்டானார்கள்.

எனினும் சிஎஸ்கே வின் தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே, அஸ்வின் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் அஸ்வின் 8 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க, சிறப்பாக விளையாடிய ஆயுஸ் மாத்ரே 20 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இதில் எட்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். இதன் காரணமாக சிஎஸ்கே அணி பவர் பிளேவில் 68 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா ஐந்து பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 ரன் மட்டுமே சேர்த்தார். இந்த தருணத்தில் நடுவரிசையில் விளையாடிய டிவால்ட் பிரவீஸ் வழக்கம் போல் தன்னுடைய அதிரடியை காட்டினார். மூன்று சிக்ஸர், இரண்டு பவுண்டரி என பறக்க விட ராஜஸ்தான் அணி தடுமாறியது.
எனினும் பிரவீஸ் முக்கிய கட்டத்தில் 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து அவர் ஆட்டம் இழந்தார். சிஎஸ்கே அணி 13.4 ஓவர்கள் எல்லாம் 137 ரன்கள் எடுத்தது. ஆனால் 6 விக்கெட்டுகள் இழந்தது. இதனால் கடைசி ஐந்து ஓவர்களில் பெரிய சாட் ஆட முடியாமல் சிஎஸ்கே வீரர்கள் மெதுவாக விளையாடும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். சிவம்துபே, தோனி ஆகியோர் விக்கெட்டுகளை கொடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தற்காப்பு ஆட்டத்தில் விளையாடினர்.
32 பந்துகளை எதிர் கொண்ட சிவம் துபே 39 ரன்களில் ஆட்டம் இழக்க தோனி 17 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஆன்சூல் காம்போஜ் ஐந்து ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. கடைசி ஐந்து ஓவரில் சிஎஸ்கே வெறும் 41 ரன்களை மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ராஜஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஆகாஷ் மத்வால் மற்றும் யுத்வீர் சிங் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.