அகமதாபாத்: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி, ஜூன் 3, செவ்வாய்க்கிழமை, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானம், ஜூன் 1, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான குவாலிஃபயர் 2 போட்டியையும் நடத்துகிறது.
பிளேஆஃப் போட்டிகள் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தன. இருப்பினும், BCCI அவற்றை முல்லன்பூர் மற்றும் அகமதாபாத்திற்கு மாற்றியது. முல்லன்பூர் குவாலிஃபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகளை நடத்தியது.

அதேசமயம் அகமதாபாத் 18வது சீசன் கடைசி இரண்டு போட்டிகளை நடத்துகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு குவாலிஃபயர் 1-ல் PBKS-ஐ வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கிடையில், MI குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி குவாலிஃபயர் 2-க்கு தகுதிபெற்றது.
அகமதாபாத்தில் நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டி மழையால் தாமதமானது. இருப்பினும், இந்தப் போட்டிக்கு ரிசர்வ் டே இல்லை. போட்டி ரத்து செய்யப்பட்டால், லீக் கட்டத்தில் முதலிடத்தில் முடித்த PBKS, RCB-யை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும், ஏனெனில் MI 4வது இடத்தில் இருந்தது.
இருப்பினும், நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் வடிகால் அமைப்பு மிகவும் சிறப்பானது. இந்த நிலையில், வரும் செவ்வாய்கிழமையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. இதனால் இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டே இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இறுதிப்போட்டிக்கு மாற்று நாள் ஜூன் 4ஆம் தேதி ரிசர்வ் டேவாக உள்ளது. ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி மாற்று நாளில் முடிந்தது, இதே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியடைந்தது, அந்த ஆட்டம் இரண்டு நாட்கள் நீடித்தது.
இதற்கிடையில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு, போட்டி இறுதியாக தொடங்கியது. ஓவர்கள் குறைக்கப்படுவதற்கு முன் 120 நிமிடங்கள் அவகாசம் இருந்ததால், போட்டியின் நீளம் பாதிக்கப்படவில்லை. முன்னதாக, PBKS கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்து வீச தேர்வு செய்தார், ஆனால் மழை தாமதத்தை ஏற்படுத்தியது.