மும்பை : ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணிக்கு அறிமுகமாகாத வீரர்களிலே அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை காஷ்மீரை சேர்ந்த ராசிக் சலாம் என்ற வேகப் பந்துவீச்சாளர் பெற்றிருக்கிறார். வளரும் வீரர்களுக்கான இந்திய அணியில் ராசிக் சலாம் களம் இறங்கி அசத்திய நிலையில் அவரை ஆர் சி பி அணி ஆறு கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
இந்த நிலையில் மைக்கேல் தளத்திற்கு ராசிக் சலாம் அளித்த பிரத்தியேக பேட்டியில் தான் கடந்து வந்த பாதை மற்றும் எதிர்காலம் திட்டம் குறித்து பேசி இருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர் 2019 ஆம் ஆண்டு தான் எனக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது.
