பெங்களூர்: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசன் பாதியில் மே 17 அன்று மீண்டும் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதவுள்ளன. ஆனால், ஆர்சிபி அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அவர்களின் கேப்டன் ரஜத் படிதார், நடப்பு சாம்பியன்களுக்கு எதிரான இந்தப் போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது ரஜத் பட்டிதாருக்கு கையில் காயம் ஏற்பட்டது.. தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லைப் பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, இது 31 வயதான இவருக்கு காயத்திலிருந்து மீள போதுமான நேரத்தை வழங்கியது. இருப்பினும், ரஜத் பட்டிதார் இன்னும் முழுமையாக போட்டிக்கு தயாராக இல்லை. அவர் முழு உடல் தகுதியை எட்ட மேலும் சில நாட்கள் தேவைப்படுகிறது.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான பட்டிதார், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை என்று முடிவு எடுக்கப்பட்டு இருந்தது, ஆனால் ஐபிஎல் அப்போது தான் ஐபிஎல் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜிதேஷ் ஷர்மா அந்தப் போட்டியில் ஆர்சிபி அணியை வழிநடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டார் என்று தெரியவந்தது.
இருப்பினும், மே 17ஆம் தேதி கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் பட்டிதாரின் பங்கேற்பு குறித்து இன்னும் உறுதியான தகவல் இல்லை, மேலும் ஆர்சிபியை யார் வழிநடத்துவார் என்பது பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. மறுபுறம், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் தசைப்பிடிப்பு மற்றும் கணுக்கால் காயம் உள்ளிட்ட பல்வேறு காயங்களிலிருந்து மீண்டு வந்தார். ஆனால், அவர் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்தப் போட்டி ஜூன் 11 முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ளது. இதனால், அவர் ஆர்சிபி அணிக்காக விளையாடுவது குறித்தும் சந்தேகம் நிலவுகிறது.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், ஆர்சிபி அணி தங்களது முதல் போட்டியில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும். ரஜத் படிதாரின் இடத்தை நிரப்பவும், ஹேசல்வுட்டுக்கு பதிலாக மாற்று வீரர்களை தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.