ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் முதல் குவாலிபையரில் யார் விளையாடப் போகிறார் என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் வெற்றி பெறும் அணி முதல் குவாலிபையர் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து விஜய் தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர் ரியன் ரிக்கல்டன் 27 ரன்களும், ரோகித் சர்மா 24 ரன்களும் எடுத்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா ஒரு ரன்னில் வெளியேற மும்பை அணி தடுமாறியது. இதேபோன்று வில் ஜாக்ஸ் 8 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்த நிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்கள் நம்பி நிலையில் அவரும் காலை வாறினார்.
வழக்கம் போல் மும்பை அணி தடுமாறிய நிலையில் சூரிய குமார் யாதவ் தான் மீண்டும் ஒரு முறையை அணியை காப்பாற்றினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு ஹர்திக் பாண்டியா நமன் தீர் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். ஒரு கட்டத்தில் சூரிய குமார் தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தினார். இதெல்லாம் மும்பை இந்தியன்ஸ் அனியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
39 பந்துகளுக்கு எதிர்கொண்ட சூரியகுமார் 57 ரன்கள் சேர்த்த நிலையில் ஆறு பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் அடங்கும். ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, நமன் தீர் 12 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
முதல் 10 ஓவரில் தடுமாறிய மும்பை அணி கடைசி பத்து ஓவரின் 101 ரன்கள் எடுத்து கௌரவமான இலக்கை எட்டி இருக்கிறது. ஆடுகளும் தற்போது தொய்வாக இருப்பதால் மும்பை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் பந்துவீச்சு தரப்பில் ஆர்ஸ்தீப் சிங், மார்கோ யான்சம் விஜயகுமார் வியாசாக் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.