IPL 2026: LSG உரிமையாளர் கோயங்கா ஒரு கோமாளி.. அவருக்கு தடை விதிக்கனும்.. லலித் மோடி சாடல்
லக்னோ: ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தோல்வியடைந்த பின், உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ரிஷப் பண்டுடன் பேசிய விதம் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. கோயங்கா தனது அணியுடன் நெருங்கிய ஈடுபாடு கொண்டவர். போட்டிக்கு முன்னும் பின்னும் வீரர்களுடன் காணப்படுவது வழக்கம்.
கடந்த ஐபிஎல் 2024-இல், அப்போதைய கேப்டன் கேஎல் ராகுலுடன் கோயங்கா உணர்ச்சிபூர்வமாகப் பேசிய வீடியோ வைரலானது. தற்போது ரிஷப் பண்டுடனான இந்த புதிய வீடியோவும், சமூக வலைதளத்தில் அதேபோன்ற பழைய சம்பவத்தை நினைவூட்டியது. கோயங்கா, பண்ட் உரையாடலின் முழு விவரங்கள் அறியப்படாத நிலையில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன்."இந்தத் தொடரில் இது முதல் போட்டிதான்.இப்படி நடக்க வேண்டிய அவசியமில்லை," என்றார்.

IPL தொடர்பான வரி ஏய்ப்பு, பணமோசடி குற்றச்சாட்டுகளுக்காக 2010 இல் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் IPL தலைவர் லலித் மோடி, வாகனின் பதிவுக்கு ஆவேசமாகப் பதிலளித்தார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர், "கோயங்கா ஒரு முழுமையான தோல்வியாளர், மிகப் பெரிய கோமாளி என்று உங்களிடம் கூறினேன். அவரது நடத்தை எனக்கு வெட்கமாக உள்ளது. இந்த ஐபிஎல் ரசிகர்களுக்காகவும், வீரர்களுக்காகவுமே உருவாக்கப்பட்டது, ஒவ்வொரு வருடமும் இது நடக்க அல்ல."
"நான் இன்னும் தலைவராக இருந்திருந்தால், அவரை உடனடியாகத் தடை செய்து, அணி உரிமையைப் பறித்திருப்பேன். அவர் ஓர் ஆடம்பரக் கோமாளி. இந்த விவகாரத்திற்காக உரிமையாளர் ஒப்பந்தத்தில் சட்டம் உள்ளது. பிசிசிஐ இதைச் செயல்படுத்தி, நேர்மையைக் காக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களைப் பணிந்து செல்வது அவரை தப்பிக்க விடாது. ரசிகர்களும் வீரர்களும் இதை நினைவில் கொள்வார்கள்," என்று கடுமையாக சாடி இருந்தார்.
இந்தச் சம்பவம் வைரலானதை அடுத்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளக்கமளித்தது. “நீங்கள் பார்ப்பது எல்லாம் உண்மையான கதை அல்ல. கேமராக்கள் இல்லாத போட்டிக்குப் பிந்தைய உண்மையான உணர்வுகளை இதோ," என்று கூறி, வீடியோவின் மற்றொரு கோணத்தையும் பகிர்ந்தது.
முன்னதாக, சஞ்சீவ் கோயங்கா, ரிஷப் பண்டுக்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். "இது ஒரு நீண்ட சீசன். எங்கள் கேப்டன் மற்றும் அணி மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஏகானாவில் ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. நாங்கள் பலமாகத் திரும்புவோம். லக்னோ கதை இன்னும் முடிவடையவில்லை,"


Click it and Unblock the Notifications