IPL 2026: சாம்சன் கலக்கிட்டாரு.. பவுலர்களை தான் பாராட்டனும்.. வெற்றி குறித்து CSK கேப்டன் ருதுராஜ்
சென்னை: ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் போட்டியில் வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ந்து 6 போட்டிகளில் தோற்ற சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. இது குறித்து போட்டிக்கு பின் பேசிய கேப்டன் ருதுராஜ், வெற்றி பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
இது ஒரு சிறப்பான கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இப்போட்டியில் வெல்ல வேண்டும் என்ற ஒருமித்த இலக்குடன் தொடக்கம் முதலே அணி சிறப்பாக விளையாடியது. மெதுவான ஆடுகளங்களில் கூட, முதலில் பேட்டிங் செய்து 200-210 ரன்களை எட்டுவது அணியின் பலம். சஞ்சு இன்று ஒரு அசாத்தியமான இன்னிங்ஸ் ஆடி எதிரணியைத் தாக்கினார். ஆயுஷும் அற்புதமான பங்களிப்பைச் செய்தார்.

எனினும், இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பந்துவீச்சாளர்களே. நடு ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும், ஆக்ரோஷமான லென்ந்துகளில் பந்து வீசுவதிலும், திட்டங்களை எளிமையாகவும் துல்லியமாகவும் பின்பற்றுவதிலும் அவர்கள் சிறந்து விளங்கினர். அணி வீரர்கள் பந்துவீச்சை மிக எளிமையாகவும் அதே சமயம் வெற்றியை நோக்கியும் கடைபிடித்தது பாராட்டத்தக்கது.
அணியின் பந்துவீச்சு வரிசையில் "X-ஃபாக்டர்" இல்லை. இருந்தும், எப்படி அதிகபட்ச பலனைப் பெறுவது, எப்படி முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது, மற்றும் கூடுதல் பவுண்டரிகளைத் தடுப்பது என்பது குறித்து ஒவ்வொரு போட்டியிலும் அணி தொடர்ந்து விவாதிக்கிறது. தாக்குதல் பந்துவீச்சை இலக்காகக் கொண்டு, பீல்டிங் , சரியான லென்த்துகளைப் பயன்படுத்தி விக்கெட்டுகள் எடுக்க முயற்சி செய்ததே வெற்றிக்கு காரணம்.
கடந்த சில ஆட்டங்களில், ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் அதிக ரன்களைக் கொடுத்து அணியின் வெற்றியைப் பாதித்தன. ஆனால் இன்று, பந்துவீச்சு குறித்த அதன் திட்டம் மிகச் சரியாக இருந்தது. பவர்ப்ளேயில் எதிரணி வலுவான தொடக்கத்தைப் பெற்றிருந்தாலும், அதன் பிறகு பந்துவீச்சாளர்கள் கணிசமாக மீண்டு வந்து, மிகத் துல்லியமாகப் பந்துவீசி, வெற்றியின் திசையை மாற்றினர்.
சென்னை ரசிகர்கள் எப்போதும் அணிக்குப் பக்கபலமாக இருந்தனர். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் அளப்பரிய ஆதரவை அசைத்துப் பார்க்கவில்லை. 'எங்கு சென்றாலும், எங்களை ஆதரிக்கும் ஏராளமான செய்திகளும் நல்வாழ்த்துக்களும் வருகின்றன. இதுவே இந்த ஊரின் சிறப்பு. அன்பான மக்கள் கிரிக்கெட் விளையாட்டை ரசிக்கிறார்கள்’ என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications