Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கே பேட்டிங்கில் பிரச்சனை ருதுராஜ் கிடையாது.. இது தான்! ஆதாரத்துடன் சொன்ன பத்ரிநாத்

மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தற்போது தடுமாறி வருகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆறு பந்துகளில் ஏழு ரன்களுடன் ஏமாற்றமளித்தார். இந்த சீசனில் இதுவரை ஐந்து போட்டிகளில், கெய்க்வாடு 13-க்கும் குறைவான சராசரியிலும், 105 ஸ்டிரைக் ரேட்டிலும் வெறும் 63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

அவரது சமீபத்திய ஃபார்ம் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத், கெய்க்வாட் மீது சிஎஸ்கே பொறுமை காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சிஎஸ்கே அணி மூன்று தொடர் தோல்விகளுக்குப் பிறகு, கடந்த இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது யூடியூப் சேனலில் பேசிய பத்ரிநாத், "பலர் ருதுராஜ் கெய்க்வாடை நீக்கிவிட்டு, உர்வால் படேலை களமிறக்க சிஎஸ்கே அணியை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதை செய்ய சிஎஸ்கே கூடாது. ஏனெனில், ருதுராஜின் கேப்டன்சி மெதுவாக முன்னேறி வருகிறது," என்று தெரிவித்தார்.

கெய்க்வாடை தொடர்ந்து தொடக்க வீரராகவே நீடிக்க வேண்டும் என பத்ரிநாத் வாதிட்டார். "மாத்ரே மற்றும் சாம்சன் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவார்கள், ருதுராஜ் மூன்றாவது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், மாத்ரே மூன்றாவது இடத்தில் சிறப்பாக பேட் செய்கிறார். அதை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

"மாத்ரே கடந்த இரண்டு போட்டிகளில் மூன்றாவது ஆட்டக்காரராக அட்டகாசமாக விளையாடி வருவதால், நன்றாகச் சென்று கொண்டிருப்பதை மாற்றுவது தேவையில்லாதது. நான் இதையே ஆதரிப்பேன்," எனவும் பத்ரிநாத் விளக்கினார். கெய்க்வாட் தவிர, சிஎஸ்கேயின் மற்ற டாப் ஆர்டர் வீரர்களான சஞ்சு சாம்சன், ஆயுஷ் மகாத்ரே ஆகியோர் கடந்த இரு ஆட்டங்களில் சிறப்பாக ஆடியுள்ளனர்.

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில், 16 ஓவர்களில் 162/3 என்ற நிலையிலிருந்தபோதும், கடைசி நான்கு ஓவர்களில் வெறும் 30 ரன்கள் மட்டுமே சிஎஸ்கேவால் எடுக்க முடிந்தது. "ருதுராஜ் கெய்க்வாடின் ஃபார்ம் மோசமாக இருந்தபோதிலும், ஒட்டுமொத்த டாப் ஆர்டர் சிறப்பாகவே செயல்படுகிறது. அது ஒரு பிரச்சனையே அல்ல. உண்மையான கவலை சிஎஸ்கேயின் பேட்டிங் பினிஷிங் தான்," என்றார் பத்ரிநாத்.

"இந்த போட்டியிலும், கடைசி நான்கு ஓவர்களில் ஓவருக்கு ஏழு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அங்குதான் உண்மையான கவலை உள்ளது," எனச் சுட்டிக்காட்டினார். இறுதி ஓவர் பேட்டிங்கில் ஷிவம் துபே மற்றும் ஜாமி ஓவர்டனின் செயல்பாடுகளையும் அவர் விமர்சித்தார்.

"துபே ஒரே மாதிரியான ஷாட்களை விளையாட முயற்சிக்கிறார், ஆனால் பந்து பேட்டின் நடுப்பகுதியில் படுவதில்லை. ஓவர்டனும் அதேபோல, ஒரே பரிமாணத்தில் செயல்படுகிறார். எந்த பேட்ஸ்மேனும் பந்துவீச்சாளர்களின் யார்க்கர் திட்டங்களை சிதைப்பதில்லை. கடந்த போட்டியில் சாம்சன் இறுதிவரை களத்தில் இருந்ததால், டெத் ஓவர்களில் ரன்கள் வந்தன," என்றார்.அனைத்திற்கும் மேலாக, அப்போட்டியில் சிவம் துபே 12 பந்துகளில் 13* ரன்களும், ஜாமி ஓவர்டன் 6 பந்துகளில் 7* ரன்களும் எடுத்து இறுதி ஓவர்களில் ரன் சேர்க்கத் திணறினர்.

Story first published: Wednesday, April 15, 2026, 15:19 [IST]
Other articles published on Apr 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+