IPL 2026: சிஎஸ்கே, ஆர்சிபி அணியில் முக்கிய பவுலர்கள் காயம்.. மாற்று வீரர்கள் அறிவிப்பு
சென்னை: ஐபிஎல் 2026 சீசனுக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 30 லட்சத்திற்கு குல்தீப் யாதவையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ. 1.6 கோடிக்கு ரிச்சர்ட் கிளீசனையும் மாற்று வீரர்களாக ஒப்பந்தம் செய்துள்ளன. காயங்கள் காரணமாக சிஎஸ்கே வீரர் கலீல் அகமது மற்றும் ஆர்சிபி வீரர் நுவான் துஷாரா நடப்புத் தொடரிலிருந்து விலகியதால் இந்த மாற்று வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கலீல் அகமதுவிற்குப் பதிலாக CSK அணியில் இணையும் குல்தீப் யாதவ், ஒரு வேகப் பந்துவீச்சாளர் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி, இதுவரை மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

இதேபோல், நுவான் துஷாராவிற்குப் பதிலாக RCB அணியில் சேர்க்கப்பட்டுள்ள இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் கிளீசன், இங்கிலாந்து அணிக்காக ஆறு டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரிலும் இவருக்கும் விளையாடிய அனுபவம் உண்டு. 2024 மற்றும் 2025 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் (இரண்டு போட்டிகள்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (ஒரு போட்டி) இரு அணிகளுக்காகவும் இவர் களமிறங்கியுள்ளார். இந்த ஒப்பந்தத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் வீரரான ரச்சின் ரவீந்திரா, இங்கிலாந்துக்கு எதிரான நியூசிலாந்தின் வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான தனது 'ரெட்-பால்' பந்துவீச்சுப் பயிற்சிகளைத் தொடங்குவதற்காக சொந்த நாட்டிற்குத் திரும்பியுள்ளார்.கேகேஆர் அணி பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்த நிலையில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications