IPL 2026: என்டா பச்ச பொய் பேசுற! சுப்மன் கில்லிடம் மோதலில் ஈடுபட்ட விராட் கோலி..பைனலில் என்ன நடந்தது?
அகமதாபாத்: ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், ஆத்சிபி வீரர் விராட் கோலிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில்லுக்கும் இடையே ஒரு மோதல் உருவானது. அகமதாபாத்தில் ஞாயிற்றுகிழமை நடந்த இப்போட்டியில், 156 ரன்கள் இலக்கை துரத்திய RCB-க்கு 25 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டன.
கடைசி வரை நின்று, ஆர்சிபி அணிக்கு வெற்றியை தேடி தந்து, அந்த தருணத்தை ருசிக்க வேண்டும் என்று கோலி நினைத்தார். அப்போது தான் அர்ஷத் கான் பந்தில் கோலி அடித்த ஷாட்டை, மிட்-ஆஃப் திசையில் ஷுப்மன் கில் பிடித்தார். கோலி அதன் உண்மைத்தன்மையை கேள்வி எழுப்ப, டிவி நடுவர் காட்சிகளை ஆய்வு செய்தார்.

இறுதியில், கோலி அவுட் இல்லை என அறிவிக்கப்பட, இருவரிடையே விவாதம் வெடித்தது. கோலி மகிழ்ச்சியில் கத்த, கில் விரக்தியடைந்தார். எனினும் போட்டிக்குப் பின் இருவரும் நட்பு பாராட்டி பேசினர். கோலி 42 பந்துகளில் 75* ரன்கள் குவித்து, அவுட் ஆகாமல் நின்று வெற்றி ரன்களை அடித்தார். இதனால் RCB தொடர்ச்சியாக இரண்டு ஐபிஎல் பட்டங்களை வென்று, இந்த அரிய சாதனையை நிகழ்த்திய மூன்றாவது அணியாக வரலாறு படைத்தது.
"கடந்த ஆண்டு இருந்த அழுத்தம் இம்முறை இல்லை" என விராட் கோலி குறிப்பிட்டார். 17 வருட காத்திருப்புக்குப் பின் RCB கடந்த ஆண்டு பட்டம் வென்றது. இம்முறை புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து, முதல் தகுதிச்சுற்று மற்றும் இறுதிப் போட்டி இரண்டிலும் GT-யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
"கடந்த ஆண்டு இருந்த அதே அழுத்தம் இம்முறை இல்லை. வீரர்களின் மன உறுதி சிறப்பாக இருந்தது. சில தோல்விகளுக்குப் பிறகும், முதலிடத்தில் முடிக்க விரும்பினோம். மும்பை இந்தியன்ஸ் வெற்றி நம்பிக்கை அளித்தது. அணியை முன்னெடுக்க நீங்கள் மட்டும் இல்லை என உணரும் ஒரு குழுவின் அற்புதம் இது," என்று கோலி தெரிவித்தார்.
விராட் கோலி, ஐபிஎல் 2026 சீசனில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 16 போட்டிகளில் 675 ரன்கள் குவித்தார். அவரது சராசரி 56-க்கு மேல் இருந்ததுடன், ஸ்ட்ரைக் ரேட் 165.84 ஆக பதிவானது. சுப்மன் கில் தொடர்ந்து பைனலில் சொதப்பி வருவது, நெருக்கடியான கட்டத்தில் அதை சமாளிக்க கூடிய திறன் அவரிடம் இல்லை என்ற குற்றடசசாட்டை வலுப்பெற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications

