IPL 2026: வாயை மூடுங்க டா! சிஎஸ்கே வீரர் கார்த்திக் சர்மாவின் மாஸ் கொண்டாட்டம்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸின் இளம் வீரர் கார்த்திக் ஷர்மா அரைசதம் அடித்து அனைவரும் வாயை மூடுங்கள் என்பது போல் சைகை ஒன்றை வெளிப்படுத்தி கொண்டாடினார்.
முகமது ஷமி வீசிய பந்தில் பிரம்மாண்டமான சிக்ஸர் அடித்து தனது 35 பந்துகளில் அரை சதத்தை எட்டியதும், 15வது ஓவரில் அவர் இந்த மைல்கல்லை அடைந்தார். பந்து மைதானத்திற்கு வெளியே பறந்ததும், வலது கை பேட்ஸ்மேனான கார்த்திக் ஹெல்மெட்டை கழற்றி வாயில் விரல் வைத்து அமைதி காத்தார். பின்னர் டக்அவுட்டை நோக்கி தனது ஜெர்சி லோகோவை காட்டினார். இது 2026 ஐபிஎல் தொடரில் அவருக்கு இரண்டாவது அரைசதம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ₹14.20 கோடிக்கு இவரை 2026 ஏலத்தில் வாங்கியது. தனது அறிமுக ஐபிஎல் சீசனில், கார்த்திக் ஒன்பது இன்னிங்ஸ்களில் 244 ரன்கள் எடுத்து, சிஎஸ்கேவின் மூன்றாவது அதிக ரன் குவித்த வீரராக உள்ளார்.
லக்னோவுக்கு எதிரான இப்போட்டியில், சிஎஸ்கே துவக்கத்திலேயே தடுமாறியது. ஆகாஷ் சிங் பந்துவீச்சில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (13 பந்துகளில் 9 ரன்கள்), சஞ்சு சாம்சன் (20 பந்துகளில் 20 ரன்கள்), மற்றும் உர்வில் படேல் (7 பந்துகளில் 6 ரன்கள்) ஆகியோர் ஆட்டமிழக்க, அணி 52/4 என்ற இக்கட்டான நிலையில் சிக்கலில் தவித்தது. அப்போது கார்த்திக்கின் அபார அரை சதம், அணியை மீட்டு வந்தது.
கார்த்திக்கின் சிறப்பான ஆட்டத்திற்கு டேவால்ட் பிரெவிஸ் 16 பந்துகளில் 25 ரன்கள் குவித்து பங்களித்தார். முந்தைய போட்டியில் லக்னோவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சிஎஸ்கே, 2026 ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றிகளைப் பதிவு செய்தது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றால், புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேற முடியும்.
மறுபுறம், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணி, 11 ஆட்டங்களில் மூன்று வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த சீசனில் கடைசி இடத்தைத் தவிர்க்க, எஞ்சிய மூன்று போட்டிகளிலும், நடப்பு போட்டியையும் சேர்த்து வெற்றி பெற அவர்கள் முயற்சிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications