Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: கேகேஆர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானேவை நீக்குங்க.. ஸ்ரீகாந்த் சாடல்

மும்பை: நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிலை மேம்படாவிட்டால், கேப்டன் அஜிங்க்யா ரஹானேவை நீக்கிவிட்டு சுனில் நரைனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார். 2024 ஐபிஎல் சாம்பியன்களான கேகேஆர் இந்த சீசனில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியைச் சந்தித்த கேகேஆர், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான மழையால் ரத்தான ஆட்டத்தில் கிடைத்த ஒரு புள்ளி மட்டுமே கிடைத்துள்ளது. இதனால், இந்தத் தொடரில் வெற்றியே பெறாத ஒரே அணியாக கேகேஆர் திகழ்கிறது.

அணியின் மோசமான ஆட்டத்திற்கு மத்தியிலும், ரஹானே பேட்டிங்கில் 38 ரன் சராசரியுடனும், 149-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடனும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். ரஹானேவின் கேப்டன்ஷிப் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "அஜிங்க்யா ரஹானேவுக்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாய்ப்புகளைக் கொடுப்பேன். எதுவும் மாறவில்லை என்றால், சீசனின் நடுப்பகுதியில் அவரை நீக்கிவிட்டு சுனில் நரைனை கேப்டனாக நியமிப்பேன்.

ரஹானே அவசியமானால் மட்டுமே பேட் செய்ய வேண்டும். இல்லையெனில், அவர் கேப்டனாக மட்டுமே இருக்கட்டும். அவர் மிடில் ஆர்டரில் பேட் செய்யக்கூடாது. அவரை கேப்டனாக நியமித்ததே முதல் தவறு. ஆனால், ரஹானேவை இப்போது நீக்குவதற்கு அவர்களுக்குத் தைரியம் இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த சீசனிலும் ரஹானே தலைமையில் 14 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் எட்டாம் இடத்தைப் பிடித்து கேகேஆர் தடுமாறியது. நடப்பு ஐபிஎல் 2026-ல் கேகேஆர் அணியினருக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பே இல்லை என்று ஸ்ரீகாந்த் வெளிப்படையாகத் தெரிவித்தார். "இந்த பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அவர்களுக்கு வாய்ப்பே இல்லை" என்றார். அணியின் வரிசையில் தீவிர மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

"வைபவ் அரோரா தொடர்ந்து 4 ஓவர்களில் 55 ரன்களை விட்டுக்கொடுக்கிறார். அவரை முக்கிய வேகப்பந்துவீச்சாளராகக் கொண்டு என்ன செய்வீர்கள்? ரிங்கு சிங் ரன் குவிப்பதில்லை. அவர் 5வது இடத்தில் ஆட முடியாது. கடைசி 3-4 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்டால் மட்டுமே அவர் அந்த வேலையைச் செய்வார். மற்றபடி அவரால் எதுவும் செய்ய முடியாது. சிறப்பாகச் செயல்படும் ஒரே நபர் கார்த்திக் தியாகிதான்."

பிளேயிங் லெவன் மாற்றங்கள் குறித்து பேசிய அவர் "ஃபின் ஆலன் மற்றும் கேமரூன் கிரீனை நீக்க வேண்டும். ரச்சின் ரவீந்திரா மற்றும் பதிரனாவை அணியில் சேர்க்கலாம். ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானேவுடன் இவர்களைத் தொடக்க வீரர்களாக களமிறக்கலாம். இது அணியைச் சமநிலைப்படுத்தும். ஆனால் அவர்களின் உதவிப் பணியாளர்கள், உண்மையான வீரர்களை விடச் சிறப்பாகத் தெரிகிறார்கள்." இந்த சூழவில் கேகேஆர் அணி தனது அடுத்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை இன்று ( அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது.

Story first published: Friday, April 17, 2026, 12:59 [IST]
Other articles published on Apr 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+